Skip to main content

கள்ள மது விற்பனையைத் தடுக்க தவறிய போலீசார்... நோட்டிஸ் அனுப்பிய எஸ்.பி!

Published on 28/07/2020 | Edited on 28/07/2020

 

Police fail to stop sale of counterfeit liquor ... SP sent notice

 

கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருந்தாலும் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் டாஸ்மாக் கடைகளையும் மூடிய தமிழ அரசு பிறகு டாஸ்மாக் கடைகளுக்கு தளர்வு கொடுத்தது. அதேபோல கரோனா தொற்று உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் முதலில் மூடப்பட்டாலும் இப்போது அதுவும் இல்லை.

ஆனால் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கரோனா பரவலைத் தடுக்க நகரங்கள் முதல் கிராமங்கள் வரை வர்த்தக அமைப்புகளே முடிவெடுத்து ஒரு வாரம் 10 நாட்கள் எனக் கடைகளை மூடி பரவலைத் தடுக்கும் முயற்சியில் உள்ளனர். ஆனால் இந்தக் கட்டுப்பாடு டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் இல்லை.

 

Police fail to stop sale of counterfeit liquor ... SP sent notice


இந்த நிலையில் தான் ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழுஅடைப்பு என  தமிழக அரசு அறிவித்தது. இந்த நாட்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. டாஸ்மாக் கடை மூடினாலும் முதல்நாளே விற்பனை அதிகரித்திருந்தது. அதாவது கள்ளத்தனமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்யும் நபர்களே பெட்டி பெட்டியாக அள்ளிச் சென்று முழு ஊரடங்கு நாட்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர்.

புதிதாகப் பொறுப்பேற்ற புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கடந்த ஞாயிற்றுக் கிழமை மாவட்டம் முழுவதும் பல சிறப்புப்படை போலீசாரை ரகசியமாக அனுப்பி கள்ள மது விற்பனை செய்த 100-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து பல நூறு மதுப்பாட்டில்களையும் பணத்தையும் பறிமுதல் செய்தார்.

 

Police fail to stop sale of counterfeit liquor ... SP sent notice


இந்தநிலையில் இன்று மாவட்டத்தில் உள்ள 35 காவல்நிலைய அதிகாரிகளுக்கும் ஒரு நோட்டிஸ் அனுப்பியுள்ளார். அதில் தங்கள் பகுதியில் ஊரடங்கு நாளில் மது விற்ற நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்கள் காவல் சரகத்தில் மது, கஞ்சா, மணல், சீட்டாட்டம் போன்ற குற்றச்செயல்களை தடுக்க அறிவுறுத்தியும் தடுக்க தவறிவிட்டீர்கள். அதனால் உங்கள் மீது ஏன் துறைரீதியான நடவடிக்கை எடுக்கக்கூடாது. இதற்கான விளக்கத்தை 3 நாட்களுக்குள் எழுத்துப் பூர்வமாக அனுப்ப வேண்டும் தவறும் பட்சத்தில் சட்டப்படி நடவடக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் புது எஸ்.பியின் அதிரடி நடவடிக்கையாக இந்த நோட்டிஸ் சென்றுள்ளதால் காவல்நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் மாவட்ட மக்களோ எஸ்.பி.யின் இந்த அதிரடி நடவடிக்கை தொடர வேண்டும் என்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.