Skip to main content

செயின் பறிப்பில் ஈடுபட்டவரை திறமையாக கைது செய்த காவல்துறையினர்!

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

The police who effectively arrested the person involved in the chain robbery

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உட்கோட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ள செங்கனாங்கொல்லை கிராமத்தில் கடந்த 23-09-21 அன்று இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு வழக்கு சம்மந்தமாக திருக்கோவிலூரர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கை கண்டுபிடிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் உத்தரவுபடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கங்காதரன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் இளவழகி தலைமையில், உதவி ஆய்வாளர் சிவசந்திரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டனர்.

 

பின்னர் சம்பவ இடத்திலிருந்த 30க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பழைய குற்றவாளிகளின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்த்தனர். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் புதுவை மாநிலம் வில்லியனூர் அருகில் உள்ள தனத்துமேட்டைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவரது மகன் விஜி (25)  என்பது தெரியவந்தது. மேற்படி நபரை பிடித்து விசாரணை செய்ததில் திருக்கோவிலூர், திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு, வேலூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் கடந்த ஒரு மாதத்திற்குள் செயின் பறிப்பு செய்ததையும், பாண்டிச்சேரி லாஸ்பேட்டை ECR ரோட்டில் ஒரு பல்சர் NS-220 வாகனத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

 

மேற்படி நபரிடமிருந்து பல்சர் பைக், 09 கிராம் உருக்கிய நகையும், 21 கிராம் தங்க செயின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. உண்மை குற்றவாளியைக் கண்டுபிடித்து கைது செய்ய உதவிய உட்கோட்ட குற்றப்பிரிவினரை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.