Skip to main content

மாற்றுத்திறனாளியைத் தாக்கிய போலீசார் பணியிடை நீக்கம்!

Published on 17/03/2022 | Edited on 17/03/2022

 

 

 

Police dismissal for assaulting disabled person ..

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகில் உள்ள கவரப்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் அப்பகுதியில் கஞ்சா போதை இளைஞர்களால் தங்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாக அதே பகுதியைச் சேர்ந்த பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி சங்கரிடம் கூறியுள்ளனர்.

 

மாணவிகளின் நலுனுக்காக சங்கர் 100 என்ற காவல் உதவி எண்ணுக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலை அடுத்து அவரை தேடி வந்த விராலிமலை போலீசார் அங்கிருந்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

 

Police dismissal for assaulting disabled person ..

 

இந்த சம்பவம் வழக்கறிஞர் பழனியப்பனுக்கு கிடைக்க பேருந்து நிலைய நிழற்குடையில் கிடந்த சங்கரை பார்த்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தொடர்ந்து சங்கரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் திருச்சி ஐஜி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் விராலிமலை காவல் நிலையத்தை சேர்ந்த சங்கரை தாக்கிய செந்தில், பிரபு, அசோக், ஆகிய மூன்று காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து காவல் ஆய்வாளர் பத்மா மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காத்திருக்கின்றனர்.

 

மற்றொருபுறம் ஒரு பார்வை மாற்றுத்திறனாளிக்கு நேர்ந்த கொடுமையை மனித உரிமை ஆணையத்தில் வழக்காக பதிவு செய்ய உள்ளதாக வழக்கறிஞர் பழனியப்பன் நம்மிடம் தொலைபேசியில் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.