Skip to main content

பட்டியலினத்தவரை சாதி பெயரை சொல்லி தாக்கிய கும்பல்; கண்டுகொள்ளாத போலீஸ்

Published on 10/02/2023 | Edited on 10/02/2023

 

police did not find out about the gang that attacked despite filing complaint
சந்திரன்

 

"எங்களுக்கு மாடு.. உங்க ஆளுங்க.. ரெண்டுமே ஒண்ணுதான்" என சாதிய வன்மத்தோடு பட்டியலினத்தைச் சேர்ந்த முதியவரை கடுமையாகத் தாக்கிய சம்பவம் குமாி மாவட்டத்தில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

 

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதிக்கு அருகே உள்ள எள்ளுவிளையைச் சோ்ந்தவா் சந்திரன். 73 வயதான இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, சொந்தமாக ஆடு, மாடுகளையும் வளர்த்து வரும் சந்திரன், அதனை அருகில் உள்ள தென்னை மரத் தோப்புகளில் மேய்த்து வருவது வழக்கம்.  இந்நிலையில், கடந்த 2ஆம் தேதியன்று, சந்திரன் தனது பசு மாட்டை குளிப்பாட்டிவிட்டு அங்குள்ள தென்னை மரத்தில் கட்டிப்போட்டுள்ளார்.

 

அப்போது, சிறிது நேரத்தில் அந்த கயிறு அவிழ்ந்து விழவே, நடுவதற்காக வைக்கப்பட்டிருந்த தென்னங்கன்றுகளின் ஓலைகளை சந்திரனின் மாடு கடித்துள்ளது. இதைப் பார்த்த அந்த தோப்பின் காவலாளி கிருஷ்ணசாமி என்பவர், அந்த மாட்டை அங்கேயே கட்டிப்போட்டு தென்னை மட்டையால் அடித்துத் துன்புறுத்தியுள்ளார். உடனே சத்தம் கேட்டு ஓடிய சந்திரன், என்னோட மாட்ட அடிக்காதிங்க என காவலாளியின் காலில் விழுந்து கதறியுள்ளார்.

 

அதன் பிறகு, அடுத்த நாள் பூமி பாதுகாப்பு சங்கச் செயலாளா் ஹாி கோபால் என்பவர், சந்திரனை ஈத்தாமொழி அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். அங்கு தனியாகச் சென்ற சந்திரனை எடுத்தவுடன் சாதிப்பெயரைச் சொல்லி திட்டிய ஹாி கோபால், அவரது கன்னத்தில் பளார் பளார் என அடித்துள்ளார். அதன் பிறகு, காவலாளிகள் கிருஷ்ணசாமியும் தங்கராஜீம் சேர்ந்துகொண்டு சந்திரனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

 

இதையடுத்து, தென்னங்கன்றுகளை மாடு கடித்ததற்காக சந்திரனுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். ஆனால், அந்த பணத்தை வாங்கிய பிறகும் கூட சந்திரனை அவமானப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே நேரம், சந்திரன் சொல்லும் விஷயங்களை ஹரிகோபால் மறுத்துள்ளார். இந்நிலையில், இந்த விவகாரத்தை கண்டித்து விசிகவினர் சந்திரனுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.