Skip to main content

ரவுடி கருக்கா வினோத்திற்கு போலீஸ் காவல்

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

Police custody for Karukka Vinod
ரவுடி கருக்கா வினோத் (கோப்புப்படம்)

 

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கருக்கா வினோத். இவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதனைப் பற்ற வைத்து கடந்த 25 ஆம் தேதி (25.10.2023) பிற்பகல் ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசியுள்ளார். உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 

இதனையடுத்து இவர் மீது வெடிபொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரவுடி கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது ரவுடி கருக்கா வினோத்துக்கு நவம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து ரவுடி கருக்கா வினோத் கடந்த 26 ஆம் தேதி (26.10.2023) காலை 06.30 மணியளவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதே சமயம் ரவுடி கருக்கா வினோத்தை விசாரிக்க காவல்துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து ரவுடி கருக்கா வினோத்தை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் ரவுடி கருக்கா வினோத்தை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நான்காவது கூடுதல் அமர்வு நீதிபதி சந்தோஷ் முன்பு முன்பு கிண்டி போலீசார் ஆஜர்படுத்தினர். முன்னதாக போலீசார் அழைத்து வந்த வாகனத்தில் இருந்து இறங்கியவுடன், ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகள் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும்’ எனப் பல்வேறு முழக்கங்களை எழுப்பினார். அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து ரவுடி கருக்கா வினோத்திற்கு 3 நாட்கள் போலீஸ் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும்  நவம்பர் 1 ஆம் தேதி மாலை ரவுடி கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி ஆஜர்படுத்த உத்தரவிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்