Skip to main content

தயாரான விசிக; தகிக்கும் சிதம்பரம்

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
police Complaint that advertisement of vck conference in Chidambaram has been destroyed

சிதம்பரம் அருகே உள்ள வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளராக உள்ளார். இந்த நிலையில், வரும் 29-ஆம் தேதி திருச்சியில் ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான விளம்பர பணியில் ஈடுபட்டிருந்தபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விளம்பரம் எழுதுவதற்கு எதிர்ப்பு எழுந்தது. 

அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தினர் 30க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி முகாம் செயலாளர் கனகராஜை தகாத வார்த்தைகளாலும் சாதி பெயரை சொல்லியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் விளம்பரத்துக்கு அடித்த வெள்ளையில், ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாடு என எழுதியதை, அதன் மீது கருப்பு பெயிண்டை கொண்டு பூசி உள்ளனர்.

எனவே இதனை அறிந்த பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமையில், கட்சியின் நிர்வாகிகள் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் கனகராஜை சாதி பெயரை சொல்லி இழிவாக பேசிய நபர்கள் மீது விசாரணை செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விளம்பரம் எழுதுவதற்காக அடிக்கப்பட்ட வெள்ளை மீது இவர்கள் கருப்பு பெயிண்டை பூசி உள்ளார்கள். ஆனால் இதே மற்ற கட்சியினர் இதேபோல் வெள்ளை அடித்தால் அதன் மீது இவர்கள் கருப்பு பெயிண்டை பூச முடியுமா? ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தால் மட்டும் அது இவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.  

மேலும் காவல் ஆய்வாளர் பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த விஷயத்தில் அவர் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்ளாமல் சரியான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளை அடித்தது தவறு என்றால் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யட்டும். ஆனால், ஒரு கட்சி விளம்பரம் எழுதுவதற்கு வெள்ளை அடித்து எழுதிய இடத்தில் கருப்பு பெயிண்டை கொண்டு அழித்துள்ளனர். இது அவர்களின் மனதில் உள்ள வன்மத்தை காட்டுகிறது. காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், காவல்துறையை கண்டித்து இப்பகுதியில் உள்ள அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.