Skip to main content

ஆம்புலன்ஸை அழைத்த போலீசார்: பதற்றத்தில் உண்மையை உளறிய தம்பதி!! 

Published on 26/05/2021 | Edited on 26/05/2021

 

The police who called the ambulance; Couple hiding the truth in tension

 

தமிழகம் முழுவதும் தளர்வில்லாத முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவக் காரணங்களுக்காக மட்டும் வெளியே செல்லும் மக்களை மட்டுமே போலீசார் அனுமதிக்கின்றனர். ஆங்காங்கே  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு தேவையின்றி ஊர் சுற்றுகிற இளைஞர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதனால் போக்குவரத்து பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

 

இப்படிப்பட்ட நிலையில்  நேற்று (25.05.2021) கடலூர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ அபிநவ், டிஎஸ்பி சாந்தி மற்றும் போலீசார் கடலூர் அண்ணா பாலம் அருகே தீவிர வாகன சோதனைகளைக் கண்காணித்துக்கொண்டிருந்தனர். அப்போது சிதம்பரம் சாலையிலிருந்து ஒரு கார் வேகமாக வந்துகொண்டிருந்தது. அதைத் தடுத்து நிறுத்திய போலீசார் அதிலிருந்த தம்பதியினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்த தம்பதிகள் தாங்கள்  புதுச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு செல்வதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் காரில் அமர்ந்திருந்த அந்தப் பெண்மணி பட்டுப்புடவை கழுத்து நிறைய தங்க நகைகள் அணிந்துகொண்டு ஆடம்பரமாக காரில் அமர்ந்திருந்தார். 

 

இதைக் கண்டு சந்தேகமடைந்த மாவட்ட எஸ்பி அவர்கள் சிதம்பரத்தில் நிறைய மருத்துவமனைகள் இருக்கும்போது இவ்வளவு தூரம் மருத்துவமனைக்கு வர வேண்டுமா? என்று அறிவுறுத்தியதோடு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் இவ்வளவு தூரம் காரில் வருவது மிகவும் தவறான செயல் என்று கூறியுள்ளார். உடனடியாக ஒரு ஆம்புலன்ஸ் வரவழைத்து அந்தத் தம்பதியினரை அதில் ஏற்றி அவர்கள் செல்லப் போவதாகக் கூறிய மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தார். 

 

இதைக் கண்டு பதறிப்போன அந்த தம்பதியினர், “நாங்கள் மருத்துவமனைக்குச் செல்லவில்லை சொந்த வேலையாக புறப்பட்டு வந்தோம். தங்களிடம் பொய் கூறிவிட்டோம்” என்று வருத்தம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததோடு, எச்சரிக்கை செய்தும் அனுப்பிவைத்துள்ளனர். தேவையில்லாமல் இதுபோன்று இனி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர். முழு ஊரடங்கு காலத்தில் இதுபோன்று தேவையில்லாமல், உரிய காரணங்கள் இல்லாமல் வாகனங்களில் வருபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு  மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார் மாவட்டக் கண்காணிப்பாளர் அபிநவ்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.