Skip to main content

அக்காவைக் கொன்றுவிட்டு, குத்தாட்டம் போட்ட தங்கை; காப்பு மாட்டிய போலீஸ் 

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

 police arrested the sister who incident her sister

 

சென்னை மீனம்பாக்கம் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி என்கிற ராஜேஸ்வரி. 34 வயதான இவர், சென்னை பார்க் டவுன் ஸ்டேஷனில் இருந்து வேளச்சேரி வரை செல்லும் மின்சார ரயில்களில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், ராஜேஸ்வரிக்கு மூன்று கணவர்கள் இருந்த நிலையில், அதில் இரண்டு பேர் ஏற்கனவே இறந்துவிட்டனர். இத்தகைய நிர்க்கதியில் தள்ளப்பட்ட ராஜேஸ்வரி தற்போது வேறொருவருடன் திருமணம் செய்துகொண்டு, தன் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.  

 

இத்தகைய சூழலில், கடந்த 19 ஆம் தேதி இரவு 8 மணியளவில் ராஜேஸ்வரி எக்மோரில் இருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் மின்சார ரயிலில் சமோசா வியாபாரம் செய்துகொண்டிருந்தார். இந்நிலையில், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கிய ராஜேஸ்வரி, அடுத்த பெட்டிக்குச் செல்வதற்காக பிளாட்பாரத்தில் நடந்து வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ராஜேஸ்வரியைச் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும், அவர்களிடம் சிக்கிய ராஜேஸ்வரி அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தபோது அவரை அந்த மர்ம கும்பல் ஓட ஓட வெட்டிவிட்டு, அதே ரயிலில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர்.

 

இதில் ராஜேஸ்வரி, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அந்த இடத்தில இருந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதையடுத்து, அங்கிருந்த சில பயணிகளின் உதவியோடு  படுகாயமடைந்த ராஜேஸ்வரியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே நேரம், ஆள்நடமாட்டம் மிகுந்த ரயில் நிலையத்தில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம், சென்னை மாநகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையில், ராஜேஸ்வரிக்கு நான்கு கணவர்கள் என்பதால், இந்தக் கொலையில் துப்பு துலங்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். இத்தகைய சூழலில், போலீசாரின் சந்தேகம் ராஜேஸ்வரியின் தங்கையான நாகவள்ளி மீது திரும்பியது. 

 

அப்போது, நாகவள்ளி குறித்து போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில் இந்தக் கொலைக்கு மாஸ்டர் மைண்ட்டாக செயல்பட்டதே நாகவள்ளிதான் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், ராஜேஸ்வரியின் தங்கையான நாகவள்ளிக்கு ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், மீனம்பாக்கத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இது, அவரது அக்காவான ராஜேஸ்வரிக்குத் தெரிய வரவே, நாகவள்ளியைக் கண்டித்துள்ளார். அதுமட்டுமின்றி, தங்கையின் ஆண் நண்பரான சக்திவேலையும் மிரட்டியுள்ளார். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத நாகவள்ளி தனது ஆண் நண்பருடன் தொடர்ந்து பழகிவந்துள்ளார்.

 

ஒரு கட்டத்தில், ராஜேஸ்வரி மீது ஆத்திரமடைந்த நாகவள்ளி அவரைக் கொலை செய்ய முடிவு எடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, தனது ஆண் நண்பரான சக்திவேலையும் தூண்டிவிட்டுள்ளார். அதன்படி, சக்திவேல் தனது கூட்டாளிகளை அழைத்து வந்து, சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து ராஜேஸ்வரியை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. 

 

இதையடுத்து, நாகவள்ளியைக் கைது செய்வதற்காக போலீசார் அவரது வீட்டிற்குச் சென்றபோது தனது அக்கா ராஜேஸ்வரியின் சடலம் முன்பு நாகவள்ளி குத்தாட்டம் போட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனிடையே, ஆடி முடித்துக் களைப்பில் இருந்த நாகவள்ளியைப் போலீசார் அந்த இடத்திலேயே கைது செய்தனர். அதோடு நாகவள்ளியின் ஆண் நண்பரான சக்திவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் சூர்யா, ஜெகதீசன் மற்றும் ஜான்சன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இதையடுத்து, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். அதே சமயம், தகாத உறவுக்கு இடையூறாக இருந்த அக்காவை, சொந்தத் தங்கையே கொலை செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

- சிவாஜி

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.