Skip to main content

நாகையில் நடந்த பயங்கர சேஸிங்.. பறந்த கார்கள்! காவல்துறை செய்த தரமான சம்பவம்

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
Police arrested karur theft group in nagai

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திய மர்ம நபர்கள், போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு அங்கிருந்து நாகை மாவட்டத்திற்கு தப்பிச்சென்றனர். இதனை கண்டுபிடித்த கரூர் போலீசார், நாகை மாவட்ட போலீஸாரை அலர்ட் செய்தனர். இதனைத் தொடர்ந்து  கொள்ளையர்களை பிடிக்க  வேளாங்கண்ணி, நாகை, நாகூர், வாஞ்சூர், கானூர் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் தனிப்படை , தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது நாகூர் முட்டம் அருகே வேகமாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் வாகனத்தில் வந்தவர்கள் வேகத்தை அதிகப்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து ஹைவே ரோந்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து ஹைவே பேட்ரோல் போலீசார், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், தனிப்படை போலீசார், அதிவிரைவு படை போலீஸார் என காவலர்கள் வாகனங்களில் விரட்டிச் சென்றனர். போலீசார் விரட்டி வருவதை அறிந்த கொள்ளையர்கள் சினிமா படத்தை மிஞ்சும் அளவிற்கு வாகனத்தில் மின்னல் வேகத்தில் பறந்தனர். இதற்கெல்லாம் சளைக்காத போலீசார், கொள்ளையர்கள் சென்ற வாகனத்தை விரட்டி சென்று நாகை மாவட்டத்தின் எல்லையான கானூர் சோதனை சாவடி அருகே மடக்கி பிடித்தனர். பின்னர் தப்பிச்செல்ல முயன்ற மதுரையைச் சேர்ந்த கண்ணன், பகுருதீன், பாண்டியன் தஞ்சையை சேர்ந்த ராஜேஷ், சிவகங்கையை சேர்ந்த அஸ்வின் ஆகிய பிரபல கொள்ளையர்கள் ஐந்து பேரை அதிரடியாக கைது செய்தனர். 

Police arrested karur theft group in nagai

பின்னர் வாகனத்தை சோதனையிட்டதில் அதில் கொள்ளையடிக்க பயன்படுத்தப்படும் இரும்பு ராடு, பட்டாகத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து வாகனத்தையும், கொள்ளை மற்றும் கொலைக்கு பயன்படுத்தும் பயங்கர ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Police arrested karur theft group in nagai

கரூரில் கைவரிசை காட்டிவிட்டு நாகைக்கு தப்பி வந்த பலே கொள்ளையர்களை வாகனத்தில் விரட்டி சென்று மடக்கிபிடித்த எஸ்.பி உள்ளிட்ட தனிப்படை போலீசாருக்கு, பொதுமக்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் சினிமா பட பாணியில் நடந்த இந்த பரபரப்பான சேசிங் காட்சிகள் நாகையில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.