Advertisment

உதவி ஆய்வாளர் வெட்டி கொலை... நான்கு பேரை கைது செய்த காவல்துறை! 

Police arrested four people Trichy Sub Inspector case

ஆடு திருடர்களால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 10 வயது சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், ஆடு திருடர்களை இருசக்கர வாகனத்தில் விரட்டி வந்தபோது புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (21.11.2021) அதிகாலை வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

Advertisment

திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதிகளில் பூமிநாதனுக்கு அருகே இருந்த செல்ஃபோன்கள் பற்றிய விவரங்களைசெல்ஃபோன் சிக்னல் வழி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் தஞ்சை மாவட்டம், கல்லணை அருகேயுள்ள தோகூர் பகுதியைச் சேர்ந்த சிலரின் எண்களைத் தனிப்படையினர் நேரில்விசாரணை நடத்தினர்.

அதன்படி 10 வயது சிறுவன் உட்பட 4பேரை போலீசார் திங்கள்கிழமை அதிகாலை சுற்றிவளைத்து கைதுசெய்தனர். அவர்களின் இருசக்கர வாகனங்களையும் கொலை செய்யப் பயன்படுத்திய கத்திகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டோர் தற்போது திருச்சியில்வைத்து விசாரிக்கப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இன்று (22.11.2021) காலை குற்றவாளிகள் கீரனூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.

police sub Inspector trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe