Skip to main content

சிறுமி கர்ப்பம்: அதிமுக பிரமுகர் போக்சோவில் கைது!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

admk leader pocso act police arrested

 

சேலம் அருகே 17 வயது சிறுமியைக் கர்ப்பமாக்கியதாக அதிமுக பிரமுகரைப் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். 

 

சேலம் மாவட்டம், சந்தியூர் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள அம்மாபாளையம் ஏரிக்கரையைச் சேர்ந்த காட்டு ராஜா மகன் வசந்தகுமார் (வயது 30), அதிமுகவில் இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் 2வது வார்டு செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். 

 

இவர், அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைக் கூறி, நெருக்கமாக பழகிவந்துள்ளார். பிளஸ் 2 வரை படித்துள்ள சிறுமி, ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்துவந்தார். 

 

வசந்தகுமார் சொந்தமாக சரக்கு வாகனம் ஓட்டிவந்தார். சிறுமி எங்கேயாவது செல்ல வேண்டுமானால், அவர் தனது வாகனத்திலேயே அழைத்துச் சென்றுள்ளார். இதனால் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரே ஊர்க்காரர்கள் மட்டுமின்றி, இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் நெருங்கிப் பழகியதை யாரும் தவறாக கருதவில்லை. 

 

இதையெல்லாம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட வசந்தகுமார், சிறுமியைத் தனது ஆசைக்கு இணங்கவைத்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்தார். 

 

சிறுமி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், உண்மை நிலவரம் தெரிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வசந்தகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர். 

 

காவல்துறை விசாரணையில் வசந்தகுமார், சந்தியூர் ஆட்டையாம்பட்டி ஊராட்சியில் 2வது வார்டு உறுப்பினராக இருப்பதும், அவருக்குத் திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. சரக்கு வாகனத்திலேயே சிறுமியைப் பலமுறை வன்கொடுமை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பென்சில் வாங்க வந்த சிறுமிக்கு சேர்ந்த கொடூரம்; மளிகைக் கடை முதியவருக்கு சிறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Cruelty meted out to a girl who came to buy a pencil; Jail for grocery shop old man

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 62 வயது முதியவரை போலீசார் கைது செய்த நிலையில் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மாஸ்கோ நகரைச் சேர்ந்தவர் 62 வயதான சிவா. இவர் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுமி ஒருவர் சிவாவின் கடைக்கு சென்று பென்சில் வாங்கியுள்ளார். அப்பொழுது சிறுமியை அழைத்துச் சென்ற சிவா அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இது குறித்து அச்சிறுமி அவரின் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சிவாவை போலீசார் கைது செய்தனர். இந்தப் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.