Police arrest those involved in sand theft

திருச்சியில் பழுர் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடுவதாக கொள்ளிடம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்திய சோதனையில் மணல் திருட்டில் ஈடுபட்ட பூமிநாதன்(38), பாலமுருகன் உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

Advertisment

மேலும் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மஹிந்திரா வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல தொட்டியம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட மகேந்திரமங்கலம் பகுதியை சேர்ந்த சிவக்குமார்(36) என்பவரை தொட்டியம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisment