Skip to main content

வாலிபர்களை மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த காவல்துறையினர்!

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

Police arrest robbers

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர் பகுதியை ஒட்டி உள்ளது அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் அண்ணா பொறியியல் கல்லூரி. அந்த சாலை வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்களை வழிமறித்த இரு இளைஞர்கள் அவர்களை கத்திமுனையில் கொலை செய்துவிடுவதாக மிரட்டி அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம், பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். அந்த கொள்ளையில் ஈடுபட்ட இரு இளைஞர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் செஞ்சி அருகே உள்ள கொரட்டுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சம்பத்(22) இவரது நண்பன் தாயனூரைச் சேர்ந்த கார்த்தி , ஞானசேகர், சிவா ஆகிய 4 பேரும் கலை அறிவியல் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது 2 மர்ம நபர்கள் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி வழிமறித்து கொள்ளையடித்துள்ளனர்.

 

அவர்கள் பயணம் செய்த இருசக்கர வாகனம், செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அந்த 2 மர்ம நபர்களும் தப்பிச் சென்றனர். பாதிக்கப்பட்ட நால்வரும் திண்டிவனம் ரோசனை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அவர்களது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை உறுதி செய்தனர். இந்த நிலையில் நேற்று அதே கல்லூரி சாலையில் காவல்துறை உதவி ஆய்வாளர் வினோத் ராஜ் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்களை போலீசார் வழிமறித்துள்ளனர்.

 

Police arrest robbers

 

போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில்  எலவசநூர் கோட்டை, அருகிலுள்ள சீயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் மகன் புகழ்வாணன், அவரது நண்பன்  ஓரகடம் அடுத்த நாவலூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் மகன் பார்த்திபன் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் தான் திண்டிவனம் பொறியியல் கல்லூரி எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை மடக்கி செல்போன் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தது அதேபோன்று ஐயன் தோப்பு, சந்தைமேடு, ஆகிய பகுதிகளில் தனியாக சென்ற பெண்களிடம் தாலி செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர்.

 

பிடிபட்டவர்களிடமிருந்து 10 பவுன் தாலி சரடு, இருசக்கர வாகனம், செல்போன், கத்தி போன்ற ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பிடிபட்ட இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ற போது காலில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.