Skip to main content

ரேஷன் அரிசி கடத்தியவர்களை கைது செய்த காவல்துறையினர்!

Published on 04/09/2021 | Edited on 04/09/2021

 

Police arrest ration rice smugglers

 

உளுந்துார்பேட்டையை அடுத்த எதலவாடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசுக்குத் தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., மணிமொழியன் தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் (02.09.2021) இரவு 10:00 மணிக்கு அங்கு சென்றனர். குடோனில் இருந்து டாரஸ் லாரியில், ரேஷன் அரிசியை ஏற்றியவர்களைப் பிடித்து விசாரித்தனர். எறையூரைச் சேர்ந்த அந்தோணிசாமி மனைவி மாசிலாராணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

 

இங்கு கோழித்தீவனம் வைக்கப் போவதாகக் கூறி, உளுந்தூர்பேட்டை - திருச்சி சாலையில் உள்ள இப்ராஹிம் சுகர்னா என்பவர் மாதம் 5,000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்துள்ளார். இங்கு ரேஷன் அரிசியைப் பதுக்கி, நாமக்கல் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, லாரி டிரைவர் சக்திவேல் (35), சிவப்பிரகாசம் (29), ராமமூர்த்தி (25), முத்து (45), நில உரிமையாளர் மாசிலாராணி (47) ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

 

குடோனில் இருந்த 25 டன் ரேஷன் அரிசி மூட்டைகள், டாரஸ் லாரி, பொலீரோ பிக்கப், இரண்டு பைக்குகள், மூன்று மொபைல் ஃபோன்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். கடத்தலில் முக்கியப் புள்ளியான இப்ராஹிம் சுகர்னாவை தேடிவருகின்றனர். இவர், இரண்டு மாதங்களுக்கு முன், ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து நீக்கம்'-துரைமுருகன் அதிரடி

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
'Removal of Jaber Sadiq from DMK'-Duraimurugan takes action

கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக்கை நிரந்தமாக நீக்கி திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி ஆகும் எனவும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக்தான் அந்த நபர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.