Skip to main content

எடப்பாடிக்கு கொலை மிரட்டல் விட்ட நபர் கைது! அப்பாவை மிரட்ட மகன் போட்ட நாடகம் அம்பலம்

Published on 28/04/2019 | Edited on 29/04/2019

சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஒரு மர்ம போன் வந்தது. அதில் கொடைக்கானலுக்கு வரும் முதல்வர் எடப்பாடியை கொலை செய்வேன் என்று பேசிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.

 

இப்படி முதல்வருக்கு கொலை மிரட்டல் விட்ட நபர் யார் என போலீசார் ஆய்வு செய்தபோது தான் திமிரட்டல் விட்டது திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலக்குண்டு ஒன்றியத்தில் இருக்கும் விராலிப்பட்டி சேர்ந்த குருசங்கர் என தெரியவந்தது,. அதைத்தொடர்ந்து போலீசார் வத்தலகுண்டு காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் குருசங்கரை போலீஸார் கைது செய்தனர். 

 

 The police arrest the person who threatened to  Chief Minister Edappadi Palanisamy

 

இது சம்பந்தமாக நாம் போலீஸ் தரப்பில் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன   

முதல்வர் எடப்பாடிக்கு மிரட்டல் விட்ட விராலிப்பட்டியை சேர்ந்த குருசங்கரின் தந்தையான ராமமூர்த்தி விராலிப்பட்டியின் முன்னாள் அதிமுக ஊராட்சி செயலாளராக இருந்து வந்தவர் தற்பொழுது நடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது அதிமுகவில் இருந்து விலகி  திமுகவில் ராமமூர்த்தி தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டார். அதைத்தொடர்ந்து திமுகவுக்கும் தேர்தல் பணியாற்றினார்.

 

இந்த நிலையில்தான் ராமமூர்த்தியின் மகனான குருசங்கர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 80ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு கொடைக்கானல் சென்று உல்லாசமாக இருந்து வந்திருக்கிறான். இந்த விஷயம் தந்தை ராமமூர்த்திக்கு  தெரியவே உடனே உறவினர்களுடன் கொடைக்கானலுக்கு சென்று தனது மகன் குருசங்கரிடம் இருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு அவனை சத்தம் போட்டுவிட்டு வந்து விட்டனர்.

 

அப்பொழுது சிறிது நேரத்திலையே உறவினர்களுடன் ராமமூர்த்தி காரில் வந்து கொண்டிருக்கும்போது போதை  இருந்த குரு சங்கரோ அந்த உறவினர் ஒருவருக்கு போன் போட்டு என்னை அடித்து பணத்தை பிடிங்கி கிட்டு போய்விட்டீர்கள் இதற்கு காரணமான இருந்த எங்க அப்பனை எப்படி பதறவைக்கபோகிறேன் என்று பாருங்க என்று கூறிஇருக்கிறான்.

 

 The police arrest the person who threatened to  Chief Minister Edappadi Palanisamy

 

அதை தொடர்ந்து தான் குருசங்கர் போதையில் சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் போட்டு எடப்பாடியை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியிருக்கிறான். அதைத்தொடர்ந்து போலீசார் ராமமூர்த்தியை பிடித்து வந்து  காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் தான் கொடைக்கானலில் இறங்கி  வத்தலக்குண்டு வந்த குருசங்கர் அங்கிருந்து திருப்பூருக்கு செல்ல பஸ்சில் சென்று கொண்டிருந்த விஷயம் போலீசாருக்கு தெரியவே கள்ளிமந்தயம் அருகே பஸ்சை மடக்கி  குருசங்கரை  கைது செய்தனர்.

     

 

இப்படி போதையில் குரு சங்கர் அப்பாவை மிரட்டுவதற்காக முதல்வர் எடப்பாடியை கொலை செய்வேன் என்று மிரட்டியதின்  மூலம் தற்போது குருசங்கர் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறான்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்