திருச்சி அதவத்தூர் பகுதியில் உள்ள முத்து அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் சூதாட்டம் நடப்பதாக சோமரசம்பேட்டை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த வீட்டின் உரிமையாளர் மணிகண்டன் என்பவர் இந்தக் கிளப்பை நடத்திவருவது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூர்த்தி, பாரூக், நித்தியானந்தம், பாலசுப்ரமணி, சீனிவாசன், மகாமுனி, சிவா, சௌந்தர் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 லட்சத்து 74 ஆயிரத்து 800 ரூபாய் பணமும் சீட்டுக் கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.