Skip to main content

பகலில் சமையல்காரன்... இரவில் திருடன்... போலீசில் சிக்கிய அதிகாலை திருடன்

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

சென்னை அண்ணாநகர், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் சில கடைகளில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக காவல் நிலையத்திற்கு வந்த புகாரை அடுத்து இதை பற்றி விசாரிக்க அண்ணாநகர் காவல் ஆணையர் சுதாகர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வந்தது. 

 

police arrest evening  Thief in chennai

 

அந்த வழக்கில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அப்பகுதியில் பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்த மாற்றுத்திறனாளி கொள்ளையன் சிக்கினான். கொள்ளை அடித்து முடித்த பின்னர் மெட்ரோ ரயில் நிலையத்தை நோக்கி கொள்ளையன் சென்றது பதிவாகி இருந்தது. அண்ணாநகர் மெட்ரோ ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர் அப்போது அதே நபர் குறிப்பிட்ட நேரத்திற்கு அங்கு வந்து செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து மாறுவேடத்தில் அங்கு காத்திருந்த தனிப்படையினர் மெட்ரோ ரயிலில் வந்திறங்கிய அந்த நபரை பிடித்தனர்.

 

police arrest evening  Thief in chennai

 

விசாரணையில் அவன் அரியலூர் பழமலைநாதபுரத்தை சேர்ந்த சிவா என்பதும், வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. திருமங்கலத்தில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் அவன் சமையலர் ஆக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. காலையிலிருந்து மாலை வரை சமையல் மாஸ்டராக வேலை செய்யும் சிவா மாலையில் திருடனாக மாறி கடைகளை உடைத்து பணத்தை மட்டுமே கொள்ளையடித்தான் என்கின்றனர் அண்ணாநகர் காவல் துறையினர். 

 

police arrest evening  Thief in chennai

 

police arrest evening  Thief in chennai

 

அதிகாலை 4 மணிக்கு கொள்ளையடிக்கும் பழக்கத்தை கொண்ட சிவா கொள்ளையடித்த பின்னர் மெட்ரோ ரயிலில் ஏறி வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று விடுவான் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான மாதாந்திர பாசும் அவரிடம் உண்டு.  இப்படி கொள்ளையடித்த பணத்தைக்குக் கொண்டு சிட்டி சென்டர், ஃபீனிக்ஸ் மால், போரம் மால் ஆகிய வணிக வளாகங்களில் விலை உயர்ந்த ஆடைகளை வாங்குவது விலை உயர்ந்த உணவுகளை சாப்பிடுவது என  உல்லாசமாக செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது. 

 

police arrest evening  Thief in chennai

 

சிவா மீது திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் பல உள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்த சிவா கடந்த மூன்று வருடங்களில் பல இடங்களில் இதுபோன்ற கைவரிசை காட்டி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.