Skip to main content

கள்ள நோட்டு கும்பல் கைது! 2 சொகுசு கார், ரொக்கம் பறிமுதல்!

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

ஆத்தூர் அருகே, கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இரண்டு சொகுசு கார்கள், 6.20 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தாண்டவராயபுரத்தைச் சேர்ந்த சுரேஷ், மும்முடி பகுதியைச் சேர்ந்த மணி ஆகிய இருவரும் கடந்த நான்கு நாள்களில் அடுத்தடுத்து கடத்தப்பட்டனர். அவர்களை காவல்துறையினர் தனிப்படையினர் அமைத்து தேடி வந்தனர்.

 Police arrest counterfeit note gang,2 Luxury car, cash seized!


இந்நிலையில், ஜூன் 19ம் தேதி மதியம் மல்லியக்கரை அருகே உள்ள கருத்த ராஜபாளையத்தில் ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த காரை மக்கள் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்து, மல்லியக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (23) என்பது தெரிய வந்தது. மல்லியக்கரையில் ஆட்டோ மீது அருண்குமாரின் கார் மோதி உள்ளது. அதனால்தான் அந்தப்பகுதி மக்கள் காரை துரத்தி வந்தது தெரிய வந்தது. 

பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவருக்கு, கள்ளநோட்டு கும்பலுடன் நெருக்கமான தொடர்பு இருப்பதும், தூத்துக்குடியைச் சேர்ந்த பிரதீப் (42) என்பவன்தான் கள்ளநோட்டு கும்பலுக்கு தலைவனாக செயல்படுவதும், அவன் தற்போது கரூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது.

 

 Police arrest counterfeit note gang,2 Luxury car, cash seized!


இதையடுத்து, அருண்குமாரை காவல்துறையினர் பிரதீப்பிடம் செல்போனில் பேச வைத்தனர். அருண்குமார் அழைத்ததன் பேரில், பிரதீப் மற்றும் அவனுடைய கூட்டாளிகளான திருச்சி சதீஸ்குமார் (30), சின்னசேலம் மேனகா (28) ஆகியோர் மல்லியக்கரைக்கு வந்தனர். அப்போது அவர்களை காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 2 சொகுசு கார்கள், 6.20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, ''கள்ளநோட்டு கும்பல் தலைவன் பிரதீப், சேலத்தில் தங்கி ஆரம்பத்தில் சின்னச்சின்ன அளவில் கள்ள நோட்டுகளை மாற்றி வந்துள்ளான். இதில் மயங்கும் ஆள்களிடம் பெரிய அளவில் நல்ல ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொண்டு, அதற்கு ஈடாக இரு மடங்கு கள்ளப்பணத்தை கைமாற்றி வந்துள்ளான். இந்த கும்பலுக்கு இன்னும் யார் யாருடன் தொடர்பு இருக்கிறது என்பதையும் விசாரித்து வருகிறோம்,'' என்றனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.