Skip to main content

மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்த பரிசோதனை முடிவு... சிறுமியின் உறவினர்கள் உட்பட 4பேரை கைது செய்த போலீஸ்! 

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

Police arrest 4, including relatives of girl

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது ஈச்சங்குப்பம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த பிளஸ்-1 படித்து வரும் மாணவி ஒருவர் இவரது பெற்றோர் இறந்து விட்டதால் தன்னுடைய பெரியம்மாவின் ஆதரவில் படித்து வந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு வரை புதுச்சேரியில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஈச்சங்குப்பம் கிராமத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சேர்ந்து பிளஸ் 1 வகுப்பில் படித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது பெரியம்மா குப்பு சிறுமியை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்.

 

அங்கு சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதை அவரது பெரியம்மா குப்புவிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குப்பு உடனடியாக செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் சிறுமி கர்ப்பிணியானது தொடர்பாக தீவிர விசாரணை செய்தனர். அதில் சம்பந்தப்பட்ட சிறுமியின் பெரியம்மா, குப்புவின் மகன் 32 வயது மோகன், அதே கிராமத்தைச் சேர்ந்த 77வயது முதியவர் மண்ணாங்கட்டி என்கிற வெங்கடேசன், 28 வயது இளையராஜா ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

 

Police arrest 4, including relatives of girl

 

மேலும் பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவத்தில் மேலும் பலர் ஈடுபட்டு இருக்கலாம் என்ற தகவலையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டார். காவல் அதிகாரிகள் பலரும் அடுத்தடுத்து செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். அதே போல் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியை போலீசார் விழுப்புரம் அரசு காப்பகத்தில் கொண்டு சென்று சேர்த்தனர்.

 

இந்த வழக்கு சம்பந்தமான விசாரணையை செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி உயரதிகாரிகள் மாற்றம் செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து நேற்று காலை அவர் விழுப்புரம் காப்பகத்தில் இருந்த அந்த பள்ளி மாணவியிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளார். அவரது விசாரணையை தொடர்ந்து ஏற்கனவே கைது செய்யப்பட்ட மோகன், மண்ணாங்கட்டி, இளையராஜா, மூவருடன் சேர்த்து பாபு , பிரபு, சத்யராஜ், ஏழுமலை, ஆகிய 4 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலத்திற்கு விரைந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

 

விசாரணை முடிவில் மாணவியின் பாலியல் வழக்கில் எட்டுப்பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக மாணவியின் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்து யாருக்கும் தெரியாமல் மறைத்ததாக மாணவியின் பெரியம்மா குப்பு மீதும் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்துள்ளனர். இதனால் பள்ளி மாணவி பாலியல் வழக்கு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி பள்ளி மாணவியை ஈவு இரக்கமின்றி கொடுமை செய்த கும்பலில் அவரது உறவினரே சம்பந்தப்பட்டிருப்பது மேலும் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.