Police are looking for a youth who misbehaved with a 10-year-old girl in Trichy

Advertisment

திருச்சி அருகே சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 17-ந் தேதி மாலை தன் வீட்டருகே விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் ஒருவர் சிறுமியை அருகில் இருந்த ஒரு வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியுள்ளார். இதில் சிறுமிக்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சிறுமியை விடுவித்த அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். ஆனால், இந்த விவரம் தெரியாத பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமி பூப்பெய்துவிட்டதாக நினைத்து தொடர்புடைய சடங்குக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். பின்னர் சிறுமியின் உடலில் நக கீறல்கள் இருந்ததையடுத்து அவரிடம் விசாரித்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் சிறுமிக்குபாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பெற்றோர் போலீஸில் புகார் செய்ததுடன் சிறுமியை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு மேற்கொள்ளப்பட்டமருத்துவ சோதனையில் சிறுமியை பாலியல் தொல்லை செய்தது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக திருவரங்கம் மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து சிறுமியை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய நபரைத்தேடி வருகின்றனர்.