ADVERTISEMENT

சிசிடிவியில் சிக்கிய முகமூடி கொள்ளையர்கள்; தேடும் பணியில் இறங்கிய போலீஸ்

11:35 AM Nov 24, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூரில் முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கார் கண்ணாடியை உடைத்து ட்ராவல் பேக்கில் இருந்த 8 பவுன் நகை, லேப்டாப்பை திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், ஆதனூர் ஊராட்சி பால்மடைபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் - சரண்யா தம்பதியினர் கரூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள தனியார் உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வரும் போது நிறுத்தி வைத்திருந்த அவர்களுக்குச் சொந்தமான காரின் கண்ணாடி உடைந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காரில் இருந்த டிராவல் பேக்கில் 8 பவுன் நகை மற்றும் லேப்டாப் திருடப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தவர்கள், போலீசாரிடம் புகார் அளித்தனர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் நகர போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்துள்ளனர்.

அதில், முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கார் கண்ணாடியை உடைத்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT