Skip to main content

யார் யாருக்கு சிம் கார்டு விற்பனை செய்யலாம்? போலீஸ் அதிரடி நடவடிக்கை

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

 

ஜவுளி, ஆயத்த ஆடை, மஞ்சள் உற்பத்தி மற்றும் விற்பனையின் சந்தையாக ஈரோடு உள்ளது. அதே போல் கட்டுமான தொழிலும் பெருகி வருகிறது. இந்த தொழில்களில் பணியாளர்களாக ஈடுபடுவது முப்பது சதவீதம் வட மாநிலத்தவர்கள் தான். ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் வட மாநிலத்தவர்கள் தான். 
 

குஜராத், கொல்கத்தா, ராஜஸ்தான், உபி., பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் தொழிலாளர்களாக இங்கு உள்ளார்கள். கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்களிலும் சிலர் ஈடுபடுகிறார்கள். 

 

police



அவர்களை முறைப்படுத்த முடிவு செய்த ஈரோடு மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் சக்திகணேசன் ஐ.பி.எஸ்., வட மாநில இளைஞர்கள் சிம் கார்டு பெறும் முறைக்கு சில விதிகளை பின்பற்ற கூறியுள்ளார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ளஈரோடு டவுன் பவானி, கோபி, சக்தி உட்பட  உட்கோட்டங்களில் அந்தந்த டி.எஸ்.பி.க்கள்  தலைமையில் ஒரு  கூட்டம் நடந்தது. சிம் கார்டு விற்பனையாளர்களை அழைத்து நடத்தப்பட்டது. 
 

அதில் சாலையோரங்களில் குடை  அமைத்து சிம் கார்டுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் மேலும் வட மாநிலத்தவர்கள் ஈரோடு மாவட்டத்தில் பணி புரிந்து கொண்டு புதிதாக சிம்கார்டு வாங்க முயன்றால்  இங்குள்ளவர்களுக்கு கொடுப்பது போல் ஏதாவது ஒரு அடையாள அட்டையை மட்டும் அதன் நகலை மட்டும் வாங்கிக் கொண்டு சிம் கார்டு கொடுக்கக் கூடாது - அவர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டை, அந்த நிறுவன உரிமையாளரின் அனுமதி கடிதம் ஆகியவை இருந்தால் மட்டும் தான் புதிய சிம் கார்டு வழங்க வேண்டும்.
 

உரிய ஆவணங்கள் இல்லாமல் சிம் கார்டு விற்றாலோ அல்லது வாங்கினாலோ வழக்கு பதிவு செய்யப்படும். என புதிய விதிகளை கூறி இனிமேல் இது போல நடக்குமாறு போலீசார் கூறியிருக்கிறார்கள். ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு என்பதெல்லாம் மத்திய அரசோடு இருக்கட்டும் தமிழ்நாட்டில் இங்குள்ளவர்களின் அடையாளம் இருந்தால் தான் வட மாநில இளைஞர்கள் இனி சிம் கார்டு பெற முடியும்.


 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.