Advertisment

வரிசையாக பிடிப்பட்ட விஷ பாம்புகள்..! 

Poisonous snakes caught in a row ..!

Advertisment

சிதம்பரம் அருகே ஒரத்தூர் கிராமத்தில் தண்ணீரின்றி இருந்த 10 அடி ஆழ கிணற்றில் பாம்புகள் உள்ளதாக சிதம்பரம் வனத்துறையினருக்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சிதம்பரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனவர் அஜிதா, வனக் காப்பாளர் அனுசுயா, சரளா மற்றும் வனப் பணியாளர்கள் புஷ்பராஜ், பாண்டியன் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பந்தபட்ட கிராமத்திற்குச் சென்று கிணற்றில் இறங்கி, 6 அடி நீளமூள்ள 8 விஷப் பாம்புகளைப் பிடித்தனர். இதனைப் பார்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர் இந்தப் பாம்புகளை வேப்பூரில் உள்ள காப்புக்காட்டில் விட்டனர்.

snake Chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe