Skip to main content

குழந்தை விரும்பி சாப்பிடும் உப்புமாவில் விஷம்... தாயின் கண்ணை மறைத்த முறையற்ற தொடர்பு!

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

Poison in the Food that the baby loves to eat ... Improper contact incident

 

கன்னியாகுமரியில் பெற்ற தாயே குழந்தைக்கு உப்புமாவில் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் குளக்கச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திகா-ஜெகதீஸ் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் சஞ்சனா என்ற பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் சரண் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் ஒன்றரை வயது ஆண் குழந்தையான சரண் விஷப்பொடியை சாப்பிட்டுவிட்டதாக வேலைக்கு சென்றிருந்த கணவன் ஜெகதீஸிடம் கார்த்திகா கூறியுள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு வந்த ஜெகதீஸ் குழந்தையை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் இரண்டு வயது குழந்தை சரண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சரண் மட்டுமில்லாது மூன்று வயது பெண் குழந்தை சஞ்சனாவிற்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக பெண் குழந்தையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

இந்த சம்பவத்தில் இரண்டு வயது சிறுவன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக ஜெகதீஸின் உறவினர்கள் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் சிறுவன் சரணின்  உடல் பிரேதப் பரிசோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. சிறுவன் விஷப்பொடியை சாப்பிட்டதற்கான எந்த அடையாளமும் இல்லாத நிலையில் சந்தேகமடைந்த போலீசார் சிறுவனின் தாய் மற்றும் தந்தையிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

அப்பொழுது தாய் கார்த்திகாவின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது மராயபுரம் பகுதியை சேர்ந்த சுனில் என்பவருடன் அதிகம் செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கார்த்திகாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுனில் என்ற அந்த நபருடன் முறையற்ற தொடர்பிலிருந்த கார்த்திகா தனக்கு திருமணமான விஷயத்தை மறைக்க குழந்தைகளைக் கொல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக எலி மருந்தை வாங்கி வந்து குழந்தைகள் இருவரும் விரும்பி சாப்பிடும் உப்புமாவில் கலந்து கொடுத்துள்ளார். இதனை மூன்று வயது பெண் குழந்தை அதிகம் சாப்பிடாத நிலையில் விஷம் கலந்த உப்புமாவை அதிகம் சாப்பிட்ட இரண்டு வயது ஆண் குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் விஷப்பொடியை குழந்தை சாப்பிட்டதாக தாய் கார்த்திகா நாடகமாடியதும் அம்பலமானது.

 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொடூர தாய் கார்த்திகாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்பதாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.