Skip to main content

குழந்தை விரும்பி சாப்பிடும் உப்புமாவில் விஷம்... தாயின் கண்ணை மறைத்த முறையற்ற தொடர்பு!

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

Poison in the Food that the baby loves to eat ... Improper contact incident

 

கன்னியாகுமரியில் பெற்ற தாயே குழந்தைக்கு உப்புமாவில் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் குளக்கச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திகா-ஜெகதீஸ் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் சஞ்சனா என்ற பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் சரண் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் ஒன்றரை வயது ஆண் குழந்தையான சரண் விஷப்பொடியை சாப்பிட்டுவிட்டதாக வேலைக்கு சென்றிருந்த கணவன் ஜெகதீஸிடம் கார்த்திகா கூறியுள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு வந்த ஜெகதீஸ் குழந்தையை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் இரண்டு வயது குழந்தை சரண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சரண் மட்டுமில்லாது மூன்று வயது பெண் குழந்தை சஞ்சனாவிற்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக பெண் குழந்தையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

இந்த சம்பவத்தில் இரண்டு வயது சிறுவன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக ஜெகதீஸின் உறவினர்கள் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் சிறுவன் சரணின்  உடல் பிரேதப் பரிசோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. சிறுவன் விஷப்பொடியை சாப்பிட்டதற்கான எந்த அடையாளமும் இல்லாத நிலையில் சந்தேகமடைந்த போலீசார் சிறுவனின் தாய் மற்றும் தந்தையிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

அப்பொழுது தாய் கார்த்திகாவின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது மராயபுரம் பகுதியை சேர்ந்த சுனில் என்பவருடன் அதிகம் செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கார்த்திகாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுனில் என்ற அந்த நபருடன் முறையற்ற தொடர்பிலிருந்த கார்த்திகா தனக்கு திருமணமான விஷயத்தை மறைக்க குழந்தைகளைக் கொல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக எலி மருந்தை வாங்கி வந்து குழந்தைகள் இருவரும் விரும்பி சாப்பிடும் உப்புமாவில் கலந்து கொடுத்துள்ளார். இதனை மூன்று வயது பெண் குழந்தை அதிகம் சாப்பிடாத நிலையில் விஷம் கலந்த உப்புமாவை அதிகம் சாப்பிட்ட இரண்டு வயது ஆண் குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் விஷப்பொடியை குழந்தை சாப்பிட்டதாக தாய் கார்த்திகா நாடகமாடியதும் அம்பலமானது.

 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொடூர தாய் கார்த்திகாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.