Skip to main content

பிரிக்கப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு கபிலர் பெயர் சூட்டவேண்டும் என கோரிக்கை... 

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Poet 'Kabilar' name wil be suit for new thiruvalluvar university

 

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பிரிவு விழுப்புரத்தை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி, சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். அதன்படி இப்பல்கலைக்கழகம் நடப்பாண்டிலேயே துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி புதிதாக துவங்கப்பட உள்ள பல்கலைக்கழகத்திற்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள் என்று சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் பழனிசாமி, பல்கலைக்கழகம் துவங்கும்போது அதற்கான பெயர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். தற்போது விழுப்புரத்தை தலைமையிடமாகக்கொண்டு துவங்கப்பட இருக்கும் புதிய பல்கலைக்கழகத்திற்கு பாரி மன்னனின் அரசவையில் கவிஞராகவும் அரசரின் உற்ற நண்பராகவும் இருந்த கபிலர் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்துள்ளது. 

 

அரசன் பாரியின் நாட்டின் மீது எதிரி நாட்டு அரசன் படையெடுத்து வந்தபோது வள்ளல் பாரி தன் இருமகளான அங்கவை, சங்கவை இருவரையும் கவிஞர் கபிலன் இடம் ஒப்படைத்தார். அவர்களை அழைத்துவந்த கபிலர், திருக்கோவிலூர் பகுதியைத் தலைமையிடமாகக்கொண்டு ஆட்சிசெய்து வந்த மலையமான் நாட்டு மன்னனுக்கு இருவரையும் மணமுடித்து வைத்தார். அப்படிப்பட்ட கபிலர், திருக்கோவிலூர் நகரை ஒட்டி செல்லும் தென்பெண்ணை ஆற்றின் மையப்பகுதியில் ஒரு குன்று உள்ளது. அந்த குன்றின் மீது ஏறி கபிலர் உண்ணா நோன்பிருந்து தன் உயிரை நீத்துள்ளார் என்பது வரலாறு. 

 

தற்போதும் கபிலர் உயிர் நீத்த அந்த குன்று நினைவுச் சின்னமாக ஆக்கப்பட்டு கபிலர் குன்று என்று அழைக்கப்பட்டு வருகிறது. திருக்கோவிலூர் பகுதிக்கு சுற்றுலா வரும் மக்கள் அந்த குன்றை வியப்போடு பார்த்து செல்கிறார்கள். 

 

கபிலருக்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் திருக்கோவிலூர் பகுதியை உள்ளடக்கி உருவாக இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு கபிலர் பெயரை சூட்ட வேண்டும் அதுவே மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதை தமிழ் ஆர்வலர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள். 

 

இதன்மூலம் திருவள்ளுவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் சங்கப் புலவர் கபிலரின் பெயர் வைப்பது பொருத்தமாக இருக்கும் எனவே கபிலர் பல்கலைக்கழகம் என பெயர் வைப்பதற்கான முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும் வேறு ஏதேனும் பெயர்களை வைத்து சர்ச்சையை உருவாக்க வேண்டியதில்லை. மேலும் திருக்கோவிலூரில் ஒவ்வொரு ஆண்டும் கபிலர் விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே அவரது பெயரே பல்கலைக்கழகத்திற்கு பொருத்தமானது என்று தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தல் அறிக்கை சர்ச்சை'- வீடியோ வெளியிட்ட இபிஎஸ்

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
'AIADMK election manifesto is a reflection of needs'- EPS released the video

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. அதிமுக தேர்தல் அறிக்கையில் சிறப்பு அம்சங்களாக ஆளுநர் பதவி நியமனத்திற்கு கருத்து கேட்க வேண்டும்; நீட் தேர்வுக்கு மாற்றாக மாற்றுத் தேர்வு முறை கொண்டு கொண்டு வரப்படும்; பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமை தொகை; சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்; முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்; சமையல் எரிவாயு விலை கட்டுப்படுத்தப்படும்; சீம கருவேல மரங்கள் அகற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; தமிழகத்தில் புதிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்படும் என்பவை இடம்பெற்றுள்ளது.

இதில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு திமுகவை பின் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அறிவிப்பா? என எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'இதில் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தி பெற இருப்பது. மத்திய அரசும் மாதம் தோறும் மகளிருக்கு உரிமை தொகை  வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்' எனத் தெரிவித்தார்.

NN

திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து அதிமுக கொடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை வைத்திருந்தார். இந்நிலையில் எக்ஸ் வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், 'அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே! உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அஇஅதிமுக தேர்தல்அறிக்கை. வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன். நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம்' என தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

Next Story

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம்; தேர்தல் ஆணையத்தை நாடிய வழக்கறிஞர்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
A.D.M.K. internal party matter A lawyer approached the Election Commission

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகத் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்ப மனுவையும் சமர்ப்பித்துள்ள நிலையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நேர்காணலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆவணங்களில் கையெழுத்திட எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போல கட்சியின் ஆவணங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட அதிகாரம் அளிக்க வேண்டும். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை கருத்தில் கொண்டு அவைத் தலைவருக்கு அதிகாரம் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.