POCSO on youths who made 2 girls pregnant

திருப்பூர் சாந்தி திரையரங்கம் பின்புற பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (21). பவானியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி நெருங்கிப் பழகியுள்ளார். இதன் மூலம் தற்போது சிறுமியின் 4 மாதம் கர்ப்பமானார். இதனையறிந்த சைல்டு லைன் அமைப்பினர் பவானி அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் சஞ்சய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இதேபோல் ஈரோடு மரப்பாலத்தைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஈரோடு பகுதி 16 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி நெருங்கிப் பழகியுள்ளார். இதன் மூலம் அந்த சிறுமி தற்போது 6 மாதம் கர்ப்பமானார். இதுகுறித்து தகவல் அறிந்த சைல்டு லைன் அனுப்பினர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment