Skip to main content

''இன்ஸ்டா காதலனால் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை...முன்னாள் கவுன்சிலர் மகன் மீது போக்சோ!

Published on 13/04/2022 | Edited on 13/04/2022

 

Pocso on the son of a former councilor!

 

திருச்சியில் பள்ளி சிறுமிக்கும் அவரது தாயாருக்கும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்த முன்னாள் கவுன்சிலர் மகனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ளது நவல்பட்டு அண்ணா நகர் பகுதி. அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவருக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவந்த கோகுல் என்ற மாணவருடன் 2019ஆம் ஆண்டு அறிமுகம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இவர்களின் நட்பானது காதலாக மாறி அடிக்கடி இருவரும் செல்போனில் பேசி வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி கோகுல், சிறுமியை செல்போனில் தொடர்பு கொண்டு தனது பெற்றோர் தனக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து இருப்பதாகவும், இதனால் உடனடியாக நான் சொல்லும் இடத்திற்கு நீ வரவேண்டும் எனவும் கூறியுள்ளான்.

 

Pocso on the son of a former councilor!

 

கோகுலின் பேச்சை நம்பி தனியார் விடுதியில் கோகுல் தங்கியிருந்த அறைக்கு சென்ற மாணவிக்கு ஹோட்டல் அறையிலேயே வைத்து கோகுல் தாலி கட்டியுள்ளான். அதன்பிறகு அச்சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். அதனைத் தொடர்ந்து பலமுறை இவ்வாறு தனியே கூப்பிட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மாணவி கோகுல் என்பவரை காதலிப்பதாக அவருடைய தாயிடம் கூறியதால் கோகுல் குறித்து சிறுமியின் தாயார் விசாரித்தார். அப்பொழுது கோகுல் வேலூர் மாவட்டம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் உமா மகேஸ்வரியின் மகன் என்பது தெரியவந்தது. இருவரையும் அழைத்து மாணவியின் தாய் எச்சரித்த நிலையில், சில நாட்கள் கழித்து சிறுமியின் தாய்க்கு செல்போனில் அழைத்த கோகுல், தனக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்றும், பணம் தரவில்லை என்றால் உங்கள் மகளுடன் நெருக்கமாக இருக்கக்கூடிய புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டியுள்ளான்.

 

Pocso on the son of a former councilor!

 

தன்னிடம் பணம் இல்லாததாக மாணவியின் தாய் மறுத்த நிலையில், பணம் இல்லை என்றால் பரவாயில்லை தான் கூப்பிடும் இடத்திற்கு வருமாறு தவறான நோக்கத்துடன் சிறுமியின் தாயுடனும் பேசியதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத மாணவியின் தாய் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், அதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோகுலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் இருந்த மாணவி தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் அழிக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.