Skip to main content

போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு! மாணவியிடம் அத்துமீறிய அரசுப் பள்ளி ஆசிரியர் தலைமறைவு!

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

POCSO Case registered on Government school teacher

 

 

கெங்கவல்லி அருகே, சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட, அரசுப்பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை, சித்தன்பட்டி குட்டையில் அரசுத் துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பகுதியைச் சேர்ந்த 23 குழந்தைகள் படித்து வருகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த குயிலி (வயது 10, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமியும் இப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த புதன்கிழமை (ஜூன் 22) வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற சிறுமி, மாலையில் அழுதபடியே வீடு திரும்பினார். 


இனிமேல் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். பள்ளியில் என்ன நடந்தது என்று சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது, பள்ளியில் செந்தாரப்பட்டியைச் சேர்ந்த அகஸ்டின் தங்கையா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும், அவர் தன்னிடம் அத்துமீறுவதாகவும் கூறியிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஊர் மக்களைத் திரட்டிக் கொண்டு, வியாழக்கிழமை (ஜூன் 23) பள்ளிக்கூடத்திற்குச் சென்று, ஆசிரியர் அகஸ்டின் தங்கையாவை தட்டிக்கேட்டுள்ளனர். 


அப்போது ஆசிரியர் அகஸ்டின், முன்னுக்குப் பின் முரணாகவும், மழுப்பலாகவும் பதில் அளித்துள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த பெற்றோரும், ஊர் மக்களும் ஆசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த், நிகழ்விடம் விரைந்து சென்று, தகராற்றை விலக்கி விட்டார். இந்த தாக்குதலில் அகஸ்டின் தங்கையா பலத்த காயம் அடைந்தார். அவர், கூடமலை அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்ந்தார். 


இது ஒருபுறம் இருக்க, ஆசிரியர் தரப்பில் சிலர், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் சமாதானம் பேசியுள்ளனர். சிறுமியின் பெற்றோர் சமாதானம் ஆகவில்லை. அவர்கள் கெங்கவல்லி காவல்நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் அளித்தனர். காவல்துறை விசாரணையில், சிறுமி குயிலி மட்டுமின்றி, அவருடைய உறவினர் ஒருவரின் 13 வயது சிறுமியிடமும் அகஸ்டின் தங்கையா பாலியல் ரீதியாக நடக்க முயன்றிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த புகார், ஆத்தூர் மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. 


காவல் ஆய்வாளர் தமிழரசி, ஆசிரியர் அகஸ்டின் தங்கையா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இதற்கிடையே, அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த அகஸ்டின் தங்கையா, தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. சொந்த ஊரான செந்தாரப்பட்டிக்குச் சென்று விசாரித்தபோது, அங்கேயும் ஆசிரியர் இல்லை என்பது தெரியவந்தது. அகஸ்டின் தங்கையாவை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.