Skip to main content

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை; தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

Published on 14/04/2023 | Edited on 14/04/2023

 

Father jailed for 20 years

 

6 வயது மகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

 

புதுச்சேரி உழவர்கரை பகுதியை சேர்ந்த 31 வயது கார் டிரைவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இதனிடையே டிரைவர் தமது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் போக்சோ  வழக்கு பதிவாகி உள்ளது. இதை அறிந்த மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து கன்னியகோவிலில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு மகளுடன் சென்றுவிட்டார்.

 

இந்நிலையில் தனது மகளை காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் உறவினர் ஒருவர் மூலம் சிறுமியை அனுப்பிய நிலையில் அங்கு வந்த டிரைவர் சொந்த மகள் என்றும் பாராமல் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்த மாணவி அதிர்ச்சி அடைந்து கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் கடந்த 13/4/2022 அன்று  டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர்.

 

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் (மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி) நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து வழக்கினை விசாரித்த தலைமை நீதிபதி செல்வநாதன் நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றவாளியான டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்குவும் அரசுக்கு உத்தரவிட்டார். கடந்தாண்டு ஏப்ரல் 13ஆம் தேதி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஓராண்டு கழித்து அதே நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இதனிடையே கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கூடலூர் கிராமத்தை சேர்ந்த செல்வம்(54) என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் இவர் தாயார் இறந்துவிட கடந்த ஆறாம் தேதி சொந்த ஊருக்கு வந்திருந்தார். அன்றே அவரது இறுதிச் சடங்குகள் முடிந்தன. மறுநாள் ஏழாம் தேதி இரவு அப்பகுதியை சேர்ந்த 16 வயதுடைய 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அங்குள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற போது செல்வம் மாணவியிடம் 'பீடி வாங்கிக் கொண்டு வா' என காசு கொடுத்துள்ளார். அந்த மாணவியும் கடைக்கு சென்று மளிகைப் பொருட்களை வாங்கிக்கொண்டு பீடியை செல்வத்திடம் கொடுத்த போது எதிர்பாராத விதமாக மாணவியின் கையை பிடித்து இழுத்து வாயை பொத்தி அருகில் உள்ளகாட்டுக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் செல்வம். இதுகுறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

பென்சில் வாங்க வந்த சிறுமிக்கு சேர்ந்த கொடூரம்; மளிகைக் கடை முதியவருக்கு சிறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Cruelty meted out to a girl who came to buy a pencil; Jail for grocery shop old man

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 62 வயது முதியவரை போலீசார் கைது செய்த நிலையில் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மாஸ்கோ நகரைச் சேர்ந்தவர் 62 வயதான சிவா. இவர் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுமி ஒருவர் சிவாவின் கடைக்கு சென்று பென்சில் வாங்கியுள்ளார். அப்பொழுது சிறுமியை அழைத்துச் சென்ற சிவா அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இது குறித்து அச்சிறுமி அவரின் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சிவாவை போலீசார் கைது செய்தனர். இந்தப் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.