Skip to main content

"நிலம் கொடுத்த மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் என்.எல்.சியை இழுத்துப் பூட்டுவோம்" - அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

Published on 05/09/2022 | Edited on 05/09/2022

 

pmk anbumani ramadoss condemns nlc

 

என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க கோரியும், சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்கள் எடுப்பதை கைவிடக் கோரியும் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தை கண்டித்து பா.ம.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

பாட்டாளி மக்கள் கட்சி  தலைவர் அன்புமணி இராமதாஸ் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.  அவர் பேசுகையில், "என்.எல்.சி நிறுவனம் நிலக்கரியை தோண்டி எடுப்பதன் மூலம் நிலத்தடி நீர் அதளபாதாளத்திற்கு சென்று விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. என்.எல்.சி நிர்வாகம் தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. தற்போது பிரித்தாலும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

 

pmk anbumani ramadoss condemns nlc

 

ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு காரணம் என்.எல்.சி. கடந்த 66 வருடங்களாக 37 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்திய என்.எல்.சி தற்போது 24 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த முயற்சித்து வருகிறது. என்.எல்.சி நிர்வாகம் தனது சுரங்கத்திலிருந்து  நீரை  வெளியேற்றி மறைமுகமாக மக்களை கிராமங்களிலிருந்து வெளியேற்றும்  முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. ஆண்டிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தில் இயங்கி வரும் என்.எல்.சி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

 

சமீபத்தில் என்.எல்.சி நிர்வாக பொறியாளர் நியமணத்தில் 299 நபர்கள் பணியில் அமர்த்தப்பட்ட நிலையில், அதில் ஒருவர் கூட தமிழர் இடம் பெறாதது மாபெரும் கண்டனத்திற்குரியது. என்.எல்.சி நிர்வாகம் தனது போக்கை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடும், நிரந்தர வேலையும் வழங்க வேண்டும். வேலை வாய்ப்பு வழங்கவில்லை என்றால்,  என்.எல்.சி நிறுவனத்தை இழுத்து மூட பாமக தயாராக உள்ளது.

 

கடலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய சில எட்டப்பர்கள் என்.எல்.சி நிர்வாகத்துடன் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகின்றனர். ராணுவத்தையே கூட்டி வந்தாலும் என்.எல்.சிக்கு பூட்டு போடுவோம். இனி யாரும் ஏமாற மாட்டோம். நிலம் எடுக்க வந்தால் முடியாது எனக் கூறுங்கள். உங்கள் அனுமதி இல்லாமல் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது. என்.எல்.சி நிறுவனம் தமிழகத்திற்கு தேவை இல்லை. எந்த நிறுவனத்தையும் நான் வேண்டாமென்று கூறியதில்லை. ஆனால் நிலம் கொடுத்தவர்களுக்கும், மண்ணின் மைந்தர்களுக்கும்,  தமிழக மக்களுக்கும் துரோகம் விளைவிக்கும் என்.எல்.சி தமிழகத்திற்கு தேவை இல்லை. அதனால் தான் என்.எல்.சியை இழுத்துப் பூட்டுவோம் என்று எச்சரிக்கும் விதமாக கூட்டு அடையாள பூட்டு ஒன்றை எடுத்து வந்துள்ளேன்.தொடர்ந்து என்.எல்.சி நிர்வாகம் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் உண்மையான பூட்டை எடுத்து வந்து இழுத்து மூடி போட்டு போடுவோம்" என்று எச்சரித்தார். 

 

முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு மாட்டு வண்டியில் வந்த அன்புமணி என்.எல்.சி நிறுவனத்திற்கு பூட்டு போடும் வகையில் அடையாளமாக பெரிய பூட்டு ஒன்றை தன்னுடன் மாட்டுவண்டியில்  எடுத்து வந்தார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் புதா.அருள்மொழி, மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர்கள் இரா.ரவிச்சந்திரன், ஜெ.கார்த்திகேயன், சண்.முத்துகிருஷ்ணன், செல்வ.மகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.