வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் (படங்கள்)

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி முதலில் சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையார் ஹெலிகாப்டர் தளத்திற்கு சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடைந்தார். அதனைத்தொடர்ந்துசென்னை சென்ட்ரல் - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில்சேவையைதொடங்கி வைத்தார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

chennai central l murugan mk stalin Narendra Modi Southern Railways vande barath
இதையும் படியுங்கள்
Subscribe