Skip to main content

ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம்; கோவில் யானையிடம் ஆசி பெற்ற பிரதமர்

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
pm Modi Sami Darshan at Srirangam temple

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்தார். அதன்படி, நேற்று மாலை சென்னையில் நடந்த கேலோ விளையாட்டுப் போட்டி துவக்க விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார். இந்த நிலையில் இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி வருகையை ஒட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலைச் சுற்றியுள்ள கடைகள் இன்று காலை முதல் பிற்பகல் வரை அடைக்கப்படுகிறது. அதேபோல், ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் பகுதியிலிருந்து ஸ்ரீரங்கம் கோயில் வரை செல்லும் பஞ்சக்கரை சாலை வழி நெடுகிலும் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. சாலையோர சுவர்களில் வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதனிடையே, பிரதமர் வருகையையொட்டி, கோயில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கோயில் வளாகத்தை சுற்றியுள்ள வீடுகளில் உள்ள நபர்கள் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்து கண்காணிப்பு நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்ய வந்துள்ள நிலையில், அதற்காக 3500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

pm Modi Sami Darshan at Srirangam temple

இந்த நிலையில் வேஷ்டி சட்டை அணிந்து திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்து வருகிறார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் யானைக்கு உணவளித்து பிரதமர் மோடி ஆசி பெற்றுக்கொண்டார். ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, பிறகு ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டுச் செல்கிறார். 

சார்ந்த செய்திகள்