கரோனா வைரஸ்அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசு பிளஸ்1 மற்றும் பிளஸ்-2 தேர்வுகளை ஒத்தி வைக்கலாமா என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது திட்டமிட்டபடி பிளஸ்-1 பிளஸ்-2 தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தேர்வு அட்டவணையில் எந்தவித மாற்றமும் இருக்காது எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேபோல் சென்னையில் பயணிகள் நலன் கருதி 50 சதவீதபேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. சென்னையில் நாளை காலை 5 மணி முதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர், நடத்துநர்கள் முக கவசம் அணியவும், ஒவ்வொரு முறை பயண முடிவிலும் கைகளைக் கழுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 3,400 மாநகரபேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.