Skip to main content

தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த அவலநிலை... பரிசோதனை முடிவை வைத்து டாக்டர்கள் கூறிய முடிவு!

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

 

Infanticide in the womb of a vaccinated pregnant woman? The result of the examination and the results stated by the doctors

 

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள 6 மாத சிசு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி அருகே இருக்கும் பத்ரகாளிபுரத்தில் வசிப்பவர் ஜெகன். இவர் டொம்புச்சேரியில் உள்ள ஒரு வாகன பழுதுபார்ப்பு நிலையத்தில் தொழிலாளியாக வேலை பார்த்துவருகிறார். இவருடைய மனைவி இருதயரோசி சில்வியா, இவர்கள் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 

 

இந்த நிலையில், இருதயரோசி சில்வியா கர்ப்பமானார். அவர் டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பகாலத்தைப் பதிவுசெய்து அங்கு சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று முன்தினம் (10.07.2021) ஜெகன் தனது மனைவியைக் கர்ப்பகால பரிசோதனைக்காக டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த மருத்துவக் குழுவினர், தற்போது கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடந்துவருவதால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பரிந்துரை செய்தனர்.

 

அதன்படி ஜெகன் தனது மனைவியை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்ட பின்னர் இருதயரோசி சில்வியா தேனியில் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் மையத்தில் ஸ்கேன் பரிசோதனை செய்தார். அங்கு பரிசோதனை முடிவை வாங்கிக்கொண்டு டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றனர். அங்கு பரிசோதனை முடிவைப் பார்த்த டாக்டர், குழந்தைக்கு இதயத்துடிப்பு இல்லை என்றும், குழந்தை எவ்வித அசைவுமற்ற நிலையில் உள்ளதால் உடனடியாக மேல் சிகிச்சைக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லுமாறு அனுப்பிவைத்தார். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருடைய வயிற்றுக்குள் இருந்த 6 மாத சிசு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

இதைக் கேட்ட அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இருதயரோசி சில்வியாவுக்கு பிரசவ வலி ஏற்படுவதற்காக மருந்து செலுத்தப்பட்டது. இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “ஸ்கேன் பரிசோதனை முடிவை வைத்து பார்க்கும்போது ஓரிரு நாட்களுக்கு முன்பே வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்திருப்பதாக தெரியவருகிறது. தடுப்பூசி செலுத்தியதற்கும், சிசுவின் இறப்புக்கும் தொடர்பு இல்லை. அதே நாளில் தடுப்பூசி செலுத்திய மற்ற கர்ப்பிணிகள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தலைப்பிரசவம் என்பதால் அறுவை சிகிச்சை செய்யாமல், சுகப்பிரசவமாக இறந்த சிசுவை வெளியே எடுக்க சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பிரசவம் முடிந்த பிறகுதான் சிசு இறப்புக்கான உண்மை காரணம் தெரியவரும்” என்று கூறினார். இச்சம்பவம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.