அண்மையில் தி.மு.க, எம்.எல்.ஏ கு.க.செல்வம் பா.ஜ.கவில் இணையபோவதாகதகவல்கள் வெளியானதையடுத்து அவர் தி.மு.கவின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து பேசுகையில், சாக்லேட் கொடுத்து எம்.எல்.ஏ கு.க.செல்வத்தை ஏமாற்றி இருக்கிறார்கள் என குறிப்பிட்டு கூறியிருந்தார்.
இதுகுறித்து அ.தி.மு.க மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எம்.எல்.ஏக் கு.க. செல்வத்தை சாக்லேட் கொடுத்து ஏமாற்றியதாக கூறியவர் ஒரு சாக்லேட்பாய் என உதயநிதி ஸ்டாலினை விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள உதயநிதி ஸ்டாலின் ''சாக்லேட்பாய் என்பது ஒன்றும் பெரிய தவறான விஷயம் அல்ல ஆனால் சாக்லேட்பாய் என சொன்னவர் பிளேபாய்'' என கலாய்க்கும் விதத்தில்கூறியுள்ளார்.