பிரபல உணவுக் கடையில் பர்கர் உள்ளே கையுறை இருந்ததால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டிவனத்தைச் சேர்ந்த டேவிட் என்பவரும், அவரது நண்பரும் விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே உள்ள பிரபல உணவகத்தில் பர்கர் வாங்கியுள்ளனர். அதனை சாப்பிடும் போது, பர்கர் உள்ளே பிளாஸ்டிக் கையுறை இருந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக இது குறித்து ஊழியர்களிடம் புகார் அளித்த போது, அங்கு பணியில் இருந்தவர்கள் மன்னிப்புக் கேட்டு, வேறு பர்கர் தருவதாகக் கூறினர்.
பர்கரை வீடியோவாக எடுத்த டேவிட், அது குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.