Skip to main content

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று பைகள் விற்பனை மையத்தை உருவாக்கிய நகராட்சி...

Published on 02/01/2019 | Edited on 02/01/2019
plastic free



தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை 01.01.2019 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. மேற்காண்ட அறிவிப்பினைச் செயல்படுத்த, அரசாணை எண். 84, சுற்றுச்சூழல் – வனத்துறை நாள் 25.06.2018-ல் ஆணைகள் வெளியிடப்பட்டது.


தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் இதர சங்கப் பிரதிநிதிகளுடன் 14.11.2018 அன்று கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் மற்றும் பதில்கள் அளிக்கப்பட்டன. தடைசெய்யப்பட்ட, ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, உணவகங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் மற்றும் பார் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டன.


அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் பங்களிப்புடன் ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சூழல் மன்றங்கள் மற்றும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்தாய்வு கூட்டங்கள், விழிப்புணர்வு பேரணிகள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டன.


இதைத் தவிர மாநிலம் முழுவதிலும் உள்ள பெரிய தொழிற்சாலைகள் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்வது குறித்த அரசாணையை பின்பற்றுமாறும் மற்றும் தொழிற்சாலை வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அறிவுறுத்தப்பட்டது.


தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 45 சுங்கச்சாவடிகளில், தடை செய்யப்பட்ட ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த அறிவிப்பு பதாகைகள் நிறுவப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு பிரச்சார ஊர்தி துவக்கி வைக்கப்பட்டது. இந்த ஊர்தி மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் தூக்கி எறியாமல் உள்ளாட்சி அமைப்புகள் அல்லது பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்ய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


2019 டிசம்பர் 1ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை நடைமுறைக்கு வந்துள்ளது. பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் மாற்று ஏற்பாடாக துணிப்பைகள், பாக்குமட்டை தட்டுகள், மண் சொப்புகள் போன்றவற்றை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டுமென திருவண்ணாமலை நகராட்சியின் சார்பில் மகளிர் குழுக்கள் மூலமாக ஒரு விற்பனை நிலையத்தை தொடங்கிவைத்துள்ளனர். இதில் சணலாலான பைகள், துணிப்பைகள், காகிதபைகள் விற்பனை நடக்கிறது என்பது குறிப்பிடதக்கது. 

 
இதுபோன்ற விற்பனை மையங்களை மாவட்டத்தில் பலயிடங்களில் திறக்க முயற்சி எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

40 டன் பிளாஸ்டிக் பறிமுதல் - வியாபாரிகளுக்கிடையே தகராறு

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
30 thousand tons of plastic seized in Tiruvannamalai

திருவண்ணாமலை நகரில் சிவன்படவீதி என்கிற கருவாட்டுக்கடை தெருவில் பிளாஸ்டிக் மொத்தமாக விற்பனை செய்யும் குடோனில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன் நேரடியாக ஆய்வு செய்தார். வெளியே பார்க்க கடைபோல் இருந்தது, உள்ளே சென்றால் குறைந்த பட்ச காற்று வசதி கூட இல்லாமல் பாதாள குகைக்குள் போவதுபோல் சுத்தி சுத்தி போய்க்கொண்டே இருந்தது. உள்ளே பரந்துவிரிந்த குடோனில் பயன்படுத்தக்கூடாத வகையை சேர்ந்த பிளாஸ்டிக் கவர் பாக்கெட்டுகள் மூட்டை மூட்டையாக அடுக்கிவைக்கப்பட்டு இருந்ததைப்பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அதன் உரிமையாளர் என வந்தவர் கலெக்டரிடம், நான் ஜீ.எஸ்.டி கட்டிட்டு தான் இந்த பொருளை வாங்குறேன், அது எப்படி குற்றமாகும், இதை எதுக்கு பறிமுதல் செய்யறிங்க? என கேள்வி எழுப்பினாரர். நீங்க இந்த பொருளை எங்கயிருந்து வாங்கறிங்க? சேலத்தில் இருந்து என்று பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்வது சட்டப்படி தவறு. நீங்க இந்த பிளாஸ்டிக் வாங்கும் இடத்தின் முகவரியை சொல்லுங்க என்று கேட்டனர். அதற்கு, “தெரியாது, போன் செய்வேன் சரக்கு அனுப்புவாங்க சார்” என பல்டியத்தார். அட்ரஸ் தெரியாம எப்படி பொருள் வாங்கறீங்க? பணம் தர்றீங்க? ஜி.எஸ்.டி கட்டறதா சொல்றீங்க எனக்கேட்க பதில் சொல்ல முடியாமல் மழுப்பினார்.

30 thousand tons of plastic seized in Tiruvannamalai

நகராட்சி ஊழியர்களை வைத்து உள்ளிருந்த பிளாஸ்டிக் பொருட்களை குப்பை வண்டியில் ஏற்றி அனுப்பிக்கொண்டே இருக்க, வந்துகொண்டே இருந்தது. அந்த ஒரு குடோனில் இருந்து மட்டும் சுமார் 30 ஆயிரம் கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். மாவட்டம் முழுவதும் 40 டன் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நெகிழி என்கிற பிளாஸ்டிக் பறிமுதல் செய்யச்சென்ற கடைகள் மற்றும் குடோன்களில் காலாவதியான, பயன்படுத்த தகுதியற்ற உணவு பொருட்களான டொமோட்டா சாஸ், பாதாம், முந்திரி பாக்கெட்டுகள், திண்பண்ட பொருட்களும் இருந்தன. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை வரவைத்து ஆய்வு செய்யச்சொன்னார் கலெக்டர். “நாங்க விற்கிறோம் மளிகை கடை, ஹோட்டல்காரங்க வந்து வாங்கிக்கிட்டு போறாங்க, அங்கயெல்லாம் ஏன் ரெய்டு போகல..” என வடநாட்டை சேர்ந்த அந்த முதலாளி கேட்க, அங்கிருந்த மற்ற வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் வியாபாரிகளுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

படங்கள் - எம்.ஆர். விவேகானந்தன்

Next Story

‘பிளாஸ்டிக் கவர்களில் உணவுப் பொருட்களை விற்கத் தடையில்லை’ - உயர்நீதிமன்றம் 

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
There is no ban on selling food items in plastic covers Madras High Court

தமிழகத்தில் பால், பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்கத் தடையில்லை என விலக்களிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதனை மறுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை திரும்ப பெறப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை உறுதி செய்த உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது.

அப்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களை அடைக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களை தடை செய்யும் அரசாணையை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்லாததால், அதை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில், பால், பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.