தமிழகத்தில் முதன்முறையாக கரோனா குணமடைத்தவரிடமிருந்து பிளாஸ்மா தானம்...!!

 Plasma donation for the first time in Tamil Nadu

தமிழகத்தில் இன்றுகரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை798 ஆகஉள்ளது. தற்போதுவரைதமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் ஒரேநாளில் 538 பேருக்குஇன்று கரோனாபாதிப்பு உறுதிசெய்யபட்டதால், சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,371 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனை ஆகியஇரண்டு இடங்களில் மட்டுமே பிளாஸ்மா தானம் செய்வதற்கான வசதிகள் உள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தவரிடமிருந்து இருந்து பெறப்படும் பிளாஸ்மாமூலம் மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில்முதன்முதலாக சென்னையில் கரோனாவிலிருந்து குணமடைந்த பெண்ஒருவர் பிளாஸ்மா தானம் செய்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனையில்இந்த பிளாஸ்மா தானம்பெறப்பட்டுள்ளது.

Chennai coronavirus rajiv ganthi hospital
இதையும் படியுங்கள்
Subscribe