Skip to main content

நீர்நிலைகரைகளை பலமாக்க வெட்டிவேர் நடவுப் பணி தொடங்கியது!

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

தண்ணீரின் நச்சுத்தன்மையை அகற்றி நீர்நிலைகளின் கரைகளில் மண் சரிவை தடுக்க வெட்டிவேர் நடப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி, ஒட்டங்காடு, நாடியம், குருவிக்கரம்பை ஆகிய கிராமங்களில் இளைஞர்களின் முயற்சியில் சொந்த செலவில் நீர்நிலை சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பலகுளங்கள் காவிரித் தண்ணீரை நிரப்பி பாசனம் செய்யப்படுகிறது.

 

 planting work to strengthen water bodies!


இந்த வகையில் முதலில் 550 ஏக்கர் பரப்பளவுள்ள பேராவூரணி பெரியகுளம் ஏரியை கைஃபா நண்பர்கள் சீரமைத்து கரைகளை பலப்படுத்தி நடைப் பயிற்சிக்கு ஏதுவாக கரைகளை சாலைகளாக அமைத்து நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கத் தொடங்கி உள்ளனர். மேலும் புதிய மண் என்பதால் அரிப்பு ஏற்படும். அதனை தடுக்க வெட்டி வேர் நட்டால் மண் அரிப்பை தடுக்கலாம். தண்ணீரும் நச்சுத்தன்மை இல்லாமல் இருக்கும் என்றனர் அனுபவமிக்க விவசாயிகள்.

இதனை அறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்.. இளைஞர்களின் முயற்சிக்கு கை கொடுக்கும் விதமாக 25 ஆயிரம் வெட்டி வேர் நாற்றுகளை தனது சொந்த செலவில் அனுப்பி வைத்தார். அந்த வேர்களை பெரியகுளம் ஏரிக்கரையில் நடும் பணியில் கைஃபா நண்பர்களுடன் தன்னார்வலர்கள், தன்னார்வ பெண்கள், மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கரைகளில் பனை விதைகளும் புதைக்கப்பட்டு வருகிறது.

 

 planting work to strengthen water bodies!

 

இளைஞர்களின் கடும் முயற்சிக்கு கிடைத்த பலனாக காவிரித் தண்ணீர் பெரிய குளம் ஏரியை நோக்கி வரத் தொடங்கிவிட்டது. அதனைப் பார்த்த இளைஞர்கள் மலர் தூவி வரவேற்றதுடன் ஏரியில் தண்ணீரை நிரப்பும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். எதற்காக இத்தனை பாடுபட்டோமோ அந்த கஷடங்களை போக்கும்விதமாக காவிரித் தாய் ஏரிக்கு வந்துவிட்டாள்.. அதை பார்க்கும் போது இத்தனை நாள் பட்ட கஷ்டங்களும் மறைந்து போகிறது என்றனர் மகிழ்ச்சியாக.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.