Skip to main content

டெல்டாவில் தொடங்கிய நடவு பணி... நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நடவு செய்யும் பெண்கள்!

Published on 27/09/2019 | Edited on 27/09/2019

தொடர் மழையை பயன்படுத்தி டெல்டா மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் சம்பா சாகுபடிக்கான நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நடவு வேலைக்கிடைத்திருப்பதால் நாட்டுப்புற பாடல்களைப் பாடியபடி உற்சாகத்துடன் நடவுசெய்கின்றனர் பெண்கள்.
 

நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களின் பெரும்பாலான ஆற்றுப்பாசனப்பகுதிகளில் தண்ணீர் வராமல்போனதால், ஒருவாரமாக தொடர்ந்து பெய்யும் மழை நீரைக்கொண்டு நெற்பயிர் நடவுப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்குப்பிறகு நடவு வேலை செய்வதால், நடவுபணியின் போது பழைய வாழ்க்கைக்கு நம்மை திரும்ப அழைக்கும் வகையில், நாட்டுப்புற பாடல்களை பாடி கலைப்பாற நடவுநட்டு அசத்துகின்றனர் வயதான பெண்கள். அதனை கேட்டு ரசித்தபடி பின்பாட்டுப்பாடி நடவு செய்கின்றனர் இளம்பெண்கள்.

 Planting work started in Delta ...  Women planting folk songs


நடவுப்பணி ஒருபுறம் தொடங்கியிருந்தாலும் ஆண்கள் வரப்புகளை மண்வெட்டியால் செதுக்கி களைகள் அகற்றுவதும், நாற்றாங்காளில் இருந்து நாற்றை பறிப்பதும், தூக்கிவந்து நடவு பெண்களுக்கு விசிரிவிடுவதுமாக படு ஜோராக விவசாயப்பணிகள் நடந்து வருகிறது. நாற்றுபறிக்கும் விவசாயிகள் கூறுகையில், " சில ஆண்டுகளுக்குப்பிறகு இந்த ஆண்டு இயற்கையும், காவிரி தாயும் கருணைக்காட்டி நடவுப்பணி தீவிரம் அடைந்துள்ளதால், தொடர்ந்து 3 மாதங்களுக்கு களையெடுத்தல், நெல் அறுவடைப்பணி என தொடர்ச்சியாக வேலை கிடைக்கும், வயிற்றுப்பசியில்லாமல் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகும் " என கூலித்தொழிலாளர்கள் மகிழ்ச்சியோடு கூறுகின்றனர். 
 

"சமீப காலமாகவே விவசாயம், ரசாயனத்தையும், அதிநவீன இயந்திரங்களையும் நம்பி நளிந்து பாரம்பரியத்தை இழந்து வருகிறது. இந்த மண்ணையும், விவசாயத்தையும் மட்டுமே நம்பி இருக்கும் கூலித்தொழிலாளிகளை அரசும், விவசாய முதலாளிகளும் கைவிட்டுவிட்டனர். எங்கோ சில இடங்களில் கிடைக்கும் வேலைகளை செய்யும்பொது, இதுபோன்ற நடவுப் பாடல்கள் மூலம் அவர்களின் மன வலிகளை கூறி பாடி உச்சிவெயிலில் அதன்தாக்கம் தெறியாமல், பசி அறியாமல் சேற்றில் இறங்கி அரும்பாடு படுகின்றனர். இதை கருத்தில் கொள்ளாத அரசு உழவுமானியம், நடவுமானியம், உரமானியம் என பெருவிவசாயிகளுக்கு உதவும் அரசு, கூலித்தொழிலாளிகளை கண்டுகொள்ள மறுக்கிறது." என்கிறார்கள் விவசாய கூலித்தொழிலாளிகள்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.