'Planned lovers'-the chased away by the police returns empty-handed

தென்காசி மாவட்டம் சின்னக்கோவிலான்குளம் காவல் சரகத்திற்குட்பட்ட ஆண்டார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாசையா. விவசாயியான இவரின் மகள் கௌரி. தென்காசியிலுள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படித்து வருபவர். அதே கிராமத்தைச் சேர்ந்த தாசையாவின் உறவினர் குடும்பத்தைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். உறவினர் என்பதால் மனோஜ்குமார் தாசையாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார். இதனால் அவருக்கும் தாசையாவின் மகளுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாகியிருக்கிறது. இருவரும் மனமொத்த காதலரானார்கள்.

Advertisment

இச்சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலர்கள் ஓடிச் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் எனத் திட்டமிட்டு வெளியேறிச் சென்றபோது, ஆத்திரமான தாசையா இது குறித்து சின்னக்கோவிலான்குளம் போலீசில் புகார் செய்திருக்கிறார். கௌரி வயது 17 நிரம்பியவர் மைனர் பெண் என்பதால் சின்னக்கோவிலான்குளம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மனோஜ்குமாரைக் கைது செய்தனர்.

Advertisment

'Planned lovers'-the chased away by the police returns empty-handed

இதனிடையே கௌரிக்கு வயது 17 போய் 18 கடந்ததால்மேஜர்ஆனார். தங்களது மகளைக் கல்லூரிக்கு அனுப்பிவைப்பதற்காகப் பெற்றோர் அவளுடன் தென்காசி பேருந்து நிலையம் வந்தனர். இதனிடையே காதலர்கள் இருவரும்தென்காசியில் இருந்துதப்பி விடலாம் என்று திட்டமிட்டதாகத் தெரிகிறது. மேலும் கௌரியே,மனோஜ்குமாரைதென்காசி வரும்படி அழைத்ததாகவும் பேசப்படுகிறது. திட்டப்படி மனோஜ்குமாரும் தயாராகத்தென்காசி வந்திருக்கிறார். கௌரியும் அவரது பெற்றோரும் பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தொலைவு நடந்து வந்தபோதுமனோஜ்குமாரும்அவரது நண்பர்கள் 4 பேர் உட்பட வந்தகார்ஒன்று அவர்கள் எதிரே வந்து நின்றதும் ஓடிச்சென்று கௌரியே அதில் ஏறிக் கொண்டார். அவரை ஏற்றிக் கொண்டகார்மின்னலாய்பறந்தது.

'Planned lovers'-the chased away by the police returns empty-handed

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தாசையா கீழே விழுந்ததில்அவருக்குகாயம்ஏற்பட்டிருக்கிறது. தகவல் சென்றுபரபரப்பான தென்காசிஇன்ஸ்பெக்டர்பாலமுருகன், காதலர்கள் பறந்து சென்ற காரை தேடி வந்திருக்கிறார். தென்காசி சுற்று வட்டாரக் காவல் நிலையங்கள்அலர்ட்செய்யப்பட, போலீசார்எல்லைப்புற பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். தவிப்பும் பதற்றமுமான சூழல். இதனிடையேசேர்ந்தமரம்போலீசாரும்வாகனத்தில்சேஸ்செய்திருக்கிறார்கள். சுரண்டைச் சாலையில் வந்தகாரிலிருந்த நான்கு பேர்போலீஸ்சோதனையைக் கண்டு மிரண்டு போய் காரை நிறுத்தாமல் தப்பியபோது, சேர்ந்தமரம்போலீசார்அந்தக் காரை விரட்டி இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில்காரில்இருந்த 4 பேரும் வயல்வெளிப்பக்கம்காரை நிறுத்தியவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியிருக்கிறார்கள். அவர்களை காடுமேடு என மூன்று மணி நேரம்மூச்சிரைக்கத்துரத்தலுக்குப் பின்பு வளைத்தபோலீசாரிடம் நாங்க அவனில்லை என்று தெரிவிக்க சப்பென்று போனதுபோலீசுக்கு. அல்வா கொடுத்த காதலர்கள் பறந்து செல்ல. வெறுங்கையுடன் திரும்பி இருக்கிறார்கள்போலீசார்.