Skip to main content

வெளிமாநில தொழிலாளர்களை ரயில் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்–தமிழக அரசுக்கு கம்யூனிஸ்ட் எம்.பி. கடிதம்

Published on 07/04/2020 | Edited on 07/04/2020

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் தொகுதி எம்.பி. திருப்பூர் சுப்பராயன் தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில்,

 

 Plan to send foreign workers by rail - Communist MP to Tamil Nadu government


"சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் வெளிமாநில, வெளிமாவட்டத் தொழிலாளர்களுக்கு (Migrant workers) அவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும் என தமிழக அரசு உள்துறை செயலாளரை கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்ட அவர் மேலும் “சென்னையில் 40 சமூக நல கூடங்களில் 6000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (Migrant Workers) தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை சொந்த ஊருக்குச் செல்லுமாறு மாநகராட்சி அதிகாரிகள் நிர்பந்தம் செய்வதாக செய்திகள் வருகின்றன.

 

 Plan to send foreign workers by rail - Communist MP to Tamil Nadu government

 

சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையர், அவர்களை வலியுறுத்தவில்லை என்றும், விருப்பப்பட்டால் போகலாம் என்றுதான் கூறியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு நகரங்களில், தமிழ்நாட்டு தொழிலுக்கும், மாநில மேம்பாட்டுக்கும் தமது உழைப்பை செலுத்திய அவர்களை, இந்த இக்கட்டான நேரத்தில் இன்னும் கௌரவத்துடன் அவர்களை தமிழக அரசு கையாள வேண்டும். அன்றாடம் உழைத்து அதன்மூலம் கிடைக்கும் ஊதியத்தில் வாழ்ந்துவந்த இவர்கள் கையிலிருந்த பணம் கரைய, கரைய மாநகராட்சியின் நிவாரண மையங்களை நோக்கி நாடிவருவது இயல்பானதாகும். எனவே, தமிழகத்துக்குள் அவர்களுடைய சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கு இலவசமாக போக்குவரத்து வசதியை செய்துதர தமிழக அரசு முன்வரவேண்டும்.
 

nakkheeran app



அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள், தமது சொந்த ஊருக்குச் செல்ல விரும்பினால் அதற்கும் மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். முன்னெப்போதும் கண்டிராத ஒரு கொடூரமான சூழலில் மத்திய அரசிடம் தயங்காமல் பேசி, இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவே ரயில்களை இயக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதோடு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்க வேண்டிய மொத்த ஊதியத்தையும் உடனடியாக அரசு பெற்றுத்தர வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிவேக விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
High speed train derailment accident in rajasthan

பர்மதி - ஆக்ரா விரைவு ரயில், குஜராத் மாநிலத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று (17-03-24) மாலை புறப்பட்ட இந்த ரயில், நள்ளிரவு ஒரு மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ரயில் தடம் புரண்டது. அதில், ரயில் எஞ்சினுடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டது. 

இந்த விபத்து குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், காயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த விபத்து குறித்து வடமேற்கு ரயில்வே மண்டலம் தெரிவிக்கையில், ரயில் தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த விபத்தால், ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையிலும் இயக்கப்படுகிறது. மேலும், ரயிலில் பயணம் செய்தவர்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள 0145-2429642 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தடம்புரண்ட ரயில்; அலறிய பயணிகள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
NN

ஆந்திராவில் இரவில் பயணிகள் ரயில் என்ஜின் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கொத்த வலசு ரயில் நிலையப் பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள், திடீரென தடம் புரண்டது. அதன் காரணமாக ரயிலில் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான சத்தத்தால், ரயிலில் பயணம் செய்த பணிகள் அலறியடித்தனர்.

பின்னர் உடனடியாக அங்கு வந்த ரயில்வே போலீசார், ரயில் தடம் புரலக் காரணம் என்ன என்று விசாரித்த போது, ரயிலை ட்ராக் மாற்றிய தருணத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. லோகோபைலட் உடனடியாக சுதாரித்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இரவு நேரத்தில் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் அங்கிருந்து கிளம்பி மாற்று வழிகளில் பேருந்துகள், ஆட்டோக்களில் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது. ரயில்வே போலீசார், இந்த விபத்து தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.