Skip to main content

பைலட் பயிற்சி கட்டணத்தை கரோனா நிவாரண உதவி வழங்கிய விண்வெளி வீராங்கனை உதய கீர்த்திகா!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020
udhaya keerthika theni

 

தேனி அல்லிநகரத்தை சேர்ந்த ஓவியர் தாமோதரன் - அமுதா தம்பதியரின் மகள் உதயகீர்த்திகா உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் நேஷனல் ஏர் ஃபோர்ஸ் யுனிவர்சிடி என்ற அந்நாட்டு விமானப்படை பல்கலைக்கழகத்தில், "ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங்" என்ற நான்காண்டு கால சிறப்புப் பொறியியல் கல்வியை, இறுதியாண்டு தேர்வில் 92.5 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார்.

அதன்பின் கடந்தாண்டு, போலந்து நாட்டில் உள்ள “அனலாக் அஸ்ட்ரோநட் டிரெயினிங் சென்டர்” என்ற விண்வெளி வீரர்கள்களுக்கான பயிற்சி மையத்திலும், போலந்து நாட்டின் ராணுவ அகாடமியிலும் விண்வெளி வீரர்களுக்கான சர்வதே அளவிலான 10 விதமான பயிற்சிகளை இரண்டு மாத காயங்கள் கற்று, வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, இந்தியா திரும்பிய அவர் விண்வெளி வீரர் பயிற்சியின் மற்றொரு முக்கிய பயிற்சியான "பைலட்" பயிற்சி பெறுவதற்கு முன் நடத்தப்படுகிற தேர்வுக்கு டெல்லியில் தங்கி அதற்கான பிரசித்தி பெற்ற நிறுவனம் ஒன்றில் ஒரு மாத காலம் படித்து வந்த நிலையில், கடந்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உலகெங்கும் "கரோனா" நோய்க் கிருமி தாண்டவமாடுவதால் நாடெங்கும் ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், இவர் கற்று வந்த பயிற்சி நிறுவனம் கால வரையின்றி அடைக்கப்பட, மூன்று மாதங்கள் டில்லியிலேயே தங்கியிருந்தார் உதயகீர்த்திகா.

அதன் பிறகு, மூன்று மாதங்கள் டில்லியிலேயே தங்கியிருந்தவர் மத்திய அரசு உள்நாட்டு விமான சேவைக்கு அனுமதி தரவும் மூன்று வாரங்களுக்கு முன்பு சொந்த ஊரான தேனிக்கு வந்து விட்டார். 

ஆனாலும், "கரோனா" வேலையும், வருமானமும் இழந்து உணவுக்கே கஷ்டப்படுகிற ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தாகம் அதிகரித்துக்கொண்டே வர அடுத்துதான் பயிலவிருக்கிற "பைலட்" பயிற்சிக்கு நாற்பது இலட்சம் ரூபாய் வரையில் தேவைப்படுகிற நிலையில், அதற்காக  கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த நான்கு இலட்சம் ரூபாயைக் கொண்டு தேனி மாவட்டத்தில் உள்ள தேனி பெரியகுளம். போடி உட்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தனது பெற்றோருடன் சென்று வழங்கி வருகின்றார். அதைக்கண்டு பொதுமக்களும் உதய கீர்த்திகாவை மனதார பாராட்டினார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.