Advertisment

கேன் நீர் நிரப்பும் குடோனில் ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு கிடைத்த அதிர்ச்சி

nn

சென்னையில் தரம் இல்லாத தண்ணீர் கேன்களை சப்ளை செய்வதாக புகார்கள் எழுந்த நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குடிநீர் நிரப்பும் குடோன்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisment

சென்னை சின்மயா நகர் பகுதியில் 'ஈஸ்வர் எண்டர்பிரைசஸ்' என்ற வாட்டர் கேன் தண்ணீர் விநியோகம் செய்யும் நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு கேன்களில் நிரப்பப்படும் தண்ணீர் தரமானதா என்பதை உறுதி செய்ய வைத்திருந்த கருவியில் புறா கூடு கட்டி இருந்தது. அதில் புறா குஞ்சு ஒன்று இறந்து கிடந்தது. இது அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த உணவு பாதுகாப்புஅதிகாரிகள் நிறுவனத்தரப்பினரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

Advertisment

raid water
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe