Skip to main content

குரங்கணி தீ விபத்துக்கு முன் சுற்றுலா பயணிகள் எடுத்த படங்கள்!

Published on 22/03/2018 | Edited on 22/03/2018


தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைக்கு டிரெக்கிங் சென்ற 36 பேர் கடந்த 12-ம் தேதி காட்டுத்தீயில் சிக்கினர். இவர்களில் சிலர் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த தீக்காயம் பெற்றவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மேலும் 8 பேர் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், குரங்கணி தீ விபத்து ஏற்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன் சுற்றுலா பயணிகள் கடைசியாக போட்டோ மற்றும் செல்பி எடுத்திருக்கிறார்கள். இந்த புகைப்படங்களில் உள்ள பலரும் இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் சிகிச்சை பெற்றும் வருகிறார்கள். சிலர் மட்டுமே தப்பித்து நலமுடன் இருக்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

6 வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ... அச்சத்தில் கொடைக்கானல்!

Published on 14/03/2022 | Edited on 14/03/2022

 

Wildfire burning about the 6th day ... Kodaikanal in fear!

 

கொடைக்கானலில் 6 வது நாளாக பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ அங்கிருப்போருக்கு அச்சுறுத்தலைத் தந்துள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வெள்ளைப்பாறை, பெருமாள் மலை உள்ளிட்ட கிட்டத்தட்ட 40 ஏக்கர்  வனப்பகுதியில் காட்டுத்தீ எரிந்து வருகிறது. ஏற்கனவே மச்சூர் வனப்பகுதியில் எரிந்த காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் வெள்ளைப்பாறை பகுதியில் காட்டுத்தீ பரவி எரிந்து வருகிறது. அதேபோல் கூக்கால் கிராமத்தில் உள்ள பழம்புத்தூர் வனப்பகுதியிலும் காட்டுத்தீயின் பரவல் அதிகமாக உள்ளது. கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் காட்டுத்தீ பரவுதல் என்பது எளிதில் நிகழக்கூடிய ஒன்றாகிவிட்டது. தீத்தடுப்பு கோடுகள், எதிர்த்தீ அமைத்தும் வனத்துறையினர் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த காட்டுத்தீயால் வனவிலங்குகள் ஊருக்குள் இடப்பெயர்வு செய்வது அதிகரிக்கும் என கொடைக்கானல் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.   

 

 

Next Story

கொடைக்கானல் அருகே வனப்பகுதிக்குள் வேகமாக பரவும் காட்டுத் தீ!

Published on 11/03/2022 | Edited on 11/03/2022

 

kodaikanal forest area incident forest officers water

 

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பெருமாள்மலை வனபகுதிக்குள் 500 ஏக்கருக்கும் மேலாக எரிந்து வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில், வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். 

 

பெருமாள்மலை வனப்பகுதிகளான தோகைவரை, மயிலாடும்பாறை மற்றும் மச்சூர் வனப்பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழன்கிழமை இரவு முதல் மச்சூர் வனப்பகுதியில் எரியத் தொடங்கிய காட்டுத் தீ, இன்று காலை வரை பல்வேறு பகுதிகளுக்கு பரவி உள்ளது. பெரும் பரப்பளவில் எரியும் காட்டுத் தீயால் வான்முட்டும் அளவுக்கு கடும் புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. 

 

தகவலறிந்த வனத்துறையினர் நள்ளிரவு முதல் காட்டுத் தீயை தீத்தடுப்பு எல்லைகளை அமைத்தும், புதர்களை வெட்டி தடுப்புகளை அமைத்தும் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதிகளில் எரியும் காட்டுத் தீயால், அரிய வகை மரங்கள், செடி, கொடிகள் மற்றும் பூச்சி இனங்கள், ஊர்வன ஆகியவை அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.