Picture of Thiruvalluvar in saffron; What was the comment made by Minister Raghupathi?

தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் இன்று (24.05.2024) மாலை 5மணிக்குத்திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அச்சிடப்பட்ட திருவள்ளுவர் திருநாள் விழா அழைப்பிதழ் ஒன்று வெளியாகி இருந்தது. அதன் முகப்பு பக்கத்தில் காவி உடையில் திருவள்ளுவர் உள்ளது போன்றுஅச்சிடப்பட்டிருந்தது.ஆளுநரின் செயலாளர்கிர்லோஷ்குமார்பெயரில் இந்தஅழைப்பிதழ்வெளியிடப்பட்டது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது.

மேலும் காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்தை வெளியிட்டதைக் கண்டித்து தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளன எனத் தகவல் வெளியாகி இருந்தது. திருவள்ளுவர் திருநாள் விழா எனக் காவி உடையில் திருவள்ளுவர் படத்துடன் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழில் மக்கள் மத்தியில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர்மாளிகைக்குக்கூடுதல்போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவள்ளுவர் காவி உடை சர்ச்சை எழுந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளுநர்மாளிகைக்குப்பாதுகாப்புபலப்படுத்தப்பட்டதாகக்கூறப்படுகிறது.

Picture of Thiruvalluvar in saffron; What was the comment made by Minister Raghupathi?

Advertisment

அதே சமயம் காவி உடையுடன் இருக்கும் திருவள்ளுவர்படத்திற்குத்தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (24.05.2024) மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது குறித்து ஆளுநர் மாளிகையின்எக்ஸ்சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “திருவள்ளுவர் திருநாள் (வைகாசி அனுஷம் வள்ளுவர் திருநாள்) எனும் புனிதமான தருணத்தில், ஆளுநர் ஆர்.என். ரவி மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில்திருவள்ளுவரைத்தரிசனம் செய்தார். பின்னர், ஆளுநர் மாளிகையில் தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கு ஆளுநர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஜனவரி மாதம் 16 தேதி (16.01.2024) திருவள்ளுவர் காவி உடை அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தைஎக்ஸ்சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு திருவள்ளுவர் தினத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அதில், “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும் புலவரும், சிறந்த தத்துவ ஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவானமரியாதையைச்செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்தமனிதக்குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்தப் புனிதமான நாளில் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும்கண்டனத்தைத்தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Picture of Thiruvalluvar in saffron; What was the comment made by Minister Raghupathi?

Advertisment

இந்நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர்ரகுபதிபுதுக்கோட்டையில்செய்தியாளர்களைச்சந்தித்துப்பேசினார். அப்போது அவர் பேசுகையில், “குரங்கு கையில் பூமாலை கிடைத்தால்அதனைப்பிய்த்துக்கொண்டே தான் இருக்கும். அதுபோல என்னவோ நம்முடைய கெட்ட நேரம் அது போன்று நமக்கு ஆளுநர் வந்து வாய்த்துள்ளார். ஏற்கனவேதிருவள்ளுவருக்குக்காவி உடை அணிவித்தது சர்ச்சை கிளம்பியது. திருப்பி காவி உடை அணிவித்தால் ஆளுநரை என்னதான் செய்ய முடியும். வாதத்துக்கு மருந்து உண்டு. பிடிவாதத்துக்கு மருந்து கிடையாது” எனத் தெரிவித்தார்.