Skip to main content

’ஐஸ்வர்யாவை காப்பாற்ற பிக்பாஸ் செய்யும் யுக்தி!’ - எரிச்சலடைந்த ரசிகர்கள்

Published on 23/09/2018 | Edited on 23/09/2018
is

 

பிக்பாஸ் வீட்டில் இருந்து பாலாஜியும், யாஷிகாவும் வெளியேற்றப்பட்டனர்.  ஆனால், ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த எவிக்‌ஷன் ஐஸ்வர்யாதான்.  அவர் வெளியேற்றப்படாததால் தொடர்ந்து காப்பாற்றப்படும் ஐஸ்வர்யாவால்  ரசிகர்கள் பிக்பாஸ் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் -2 இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு பகுதிக்கு வருகிறது.  பிக்பாஸ்-1 100 நாள்தான்.  ஆனால், பிக்பாஸ் -2வில் 5 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.   வழக்கமாக ஞாயிறு மட்டும் எவிக்‌ஷன் இருக்கும்.  


   இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கிறது என்று சென்ற வாரமே கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.  அதாவது  சனிக்கிழமை ஒருவரும்,  ஞாயிற்றுக்கிழமை ஒருவரும் வெளியேற்றப்படுவார்கள்.  அதன்படி சனிக்கிழமை நேற்று பாலாஜி வெளியேற்றப்பட்டார்.  வெளியேற்றப்படுகிறீர்கள் என்று கமல்ஹாசன் அறிவித்ததும், பாலாஜி கொஞ்ச நேரம் அப்செட்.  அவரது முகம்  இறுக்கமாக இருந்தது.  பின்னர் கஷ்டப்பட்டு சிரித்தபடியே வெளியேறினார்.  ’இதே கடந்த பிக்பாஸாக இருந்தால் நீங்கள் இறுதிபோட்டியாளர்.  இந்த சீசனில்  5 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அந்த வாய்ப்பு உங்களுக்கு நழுவியிருக்கிறது’என்று கமல் ஆறுதல் கூறியபோதும், கஷ்டப்பட்டு சிரித்தார் பாலாஜி.

 

ai

 

இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த் வெளியேற்றப்படுகிறார்.  பிக்பாஸ் -2 இன் துவக்கத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த ஐஸ்வர்யா  கடைசி வரை வெளியேற்றப்படாமல் இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளார்.  ஓட்டுக்களின் அடிப்படையில் அவர் காப்பாற்றப்பட்டார் என்று கமல் அறிவித்தாலும், ரசிகர்கள் பெரும்பான்மையினர் ஐஸ்வர்யாவுக்கு எதிராக இருக்கும்போது எப்படி அவருக்கு ஓட்டுகள் அதிகம் விழும்.  விளையாட்டில் யுக்தி வைக்கும் ஐஸ்வர்யாவை காப்பாற்ற பிக்பாஸ் செய்யும் யுக்தியா இது  என்று ரசிகர்கள் எரிச்சலடைந்துள்ளனர்.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நவராத்திரி கொலுவை ரசிகர்களின் வீட்டுக்குச் சென்று பார்வையிட்ட விஜய் டிவி ஸ்டார்ஸ்

Published on 26/10/2023 | Edited on 26/10/2023

 

star vijay navaratri celebration

 

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி, நவராத்திரி விழாவைப் புதுமையான முறையில் தமிழக மக்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளது. தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன் விஜய் டிவி ஸ்டார்ஸ் இணைந்து, நவராத்திரி விழாவைக் கொண்டாடியுள்ளனர். 2500 பெண்கள் கலந்துகொள்ள, 10000க்கு மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக இந்த விழா நடந்தேறியுள்ளது. 

 

பொதுமக்கள் கலந்துகொள்ள திரு விளக்குப் பூஜை, சொற்பொழிவு அமர்வு, சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் பக்திப் பாடல் நிகழ்ச்சி, செஃப் தாமுவின் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதம் எனப்  பல்வேறு நிகழ்வுகள் நடத்தியுள்ளது விஜய் டிவி. மொத்தமாக ஏழு நகரங்களில் நடந்த இந்த விழாவினில் 2500க்கும் மேற்பட்ட பெண்கள் விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் திரு விளக்கு பூஜை உட்பட நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

 

தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு ஊர்களிலும் மக்கள் அதிகம் கூடி, நவராத்திரி விழாவினை விஜய் டிவி உடன் இணைந்து கொண்டாடினர். ஏறத்தாழ 10000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடி இவ்விழாவினை ரசித்துள்ளனர். 

 

நவராத்திரி பெண்களுக்கு உரித்தான விழா என்பதால் ஸ்டார் விஜய் ஸ்டார்ஸ் பெண் பிரபலங்கள் அனைவரும் இதில் மக்களுடன் இணைந்து கலந்துகொண்டு நவராத்திரியைக் கொண்டாடினர் இவர்களுடன் ஸ்டார் விஜய் முன்னணி பிரபலங்கள் பலரும் இவ்விழாவினில் பங்கேற்றனர். விஜய் தொலைக்காட்சி நவராத்திரி ஸ்பெஷலாக நடந்து முடிந்த நவராத்திரி கொண்டாட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

 

 

Next Story

தமிழ்நாட்டில் ஏழு நகரங்களில் விஜய் டிவி நடத்தும் நவராத்திரி கொண்டாட்டம்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

 Vijay TV Navratri celebrations in seven cities in Tamil Nadu

 

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன் இணைந்து நவராத்திரி கொண்டாட்ட விழாவை நடத்துகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து திரு விளக்குப் பூஜை,  பிரபலங்கள் கலந்து கொள்ளும் நவராத்திரி குறித்த சொற்பொழிவு அமர்வு, சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் பக்திப் பாடல் நிகழ்ச்சி, செஃப் தாமுவின் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதம் ஆகியவை நடக்கவுள்ளது. 

 

நவராத்திரி பெண்களுக்கு உரித்தான விழா என்பதால் ஸ்டார் விஜய் ஸ்டார்ஸ் பெண் பிரபலங்கள் அனைவரும் இதில் மக்களுடன் இணைந்து கலந்துகொண்டு நவராத்திரியைக் கொண்டாடவுள்ளனர். திருவிளக்கு பூஜைக்கு முன்பதிவு டோக்கன் பெற்றுக்கொண்ட பக்தர்கள் விளக்கு மற்றும் பூஜை தட்டுடன் வந்தால் மட்டும் போதும் பூஜைக்கான அனைத்து பொருட்களும் வழங்கப்படும். விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து நவராத்திரியை வெகு சிறப்பாகக் கொண்டாடலாம். சூப்பர் சிங்கர் திறமையாளர்களின் பாடல்களை நேரடியாகக் கேட்டு மகிழலாம். அத்துடன் செஃப் தாமுவின் தயாரிப்பில் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதத்தை உண்டு மகிழலாம். 

 

இந்நிகழ்ச்சிகள் காஞ்சிபுரத்தில் 15 அக்டோபர் 2023 நேற்று முதலாவதாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்யலட்சுமி, ஆஹா கல்யாணம் சீரியலிலிருந்து மகா ஆகியோர் மக்களுடன் இணைந்து சிவராத்திரி பூஜையில்  கலந்துகொண்டனர். விஜய் டிவி நட்சத்திரங்கள் பூஜையில் கலந்துகொண்டதை  மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பாராட்டினர். 

 

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சென்னையில் இன்று (16 அக்டோபர் 2023),  ஈரோட்டில் 17 அக்டோபர் 2023 , திருச்சியில் 18 அக்டோபர் 2023  திருநெல்வேலியில் 20 அக்டோபர் 2023, தஞ்சாவூரில் 21 அக்டோபர் 2023, மதுரையில் 22 அக்டோபர் 2023 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. விஜய் டிவி நவராத்திரி ஸ்பெஷலாக கொலு வைக்கும் போட்டியையும் அறிவித்துள்ளது. உங்கள் வீட்டில் வைக்கும் அழகான கொலுவின் போட்டோவை @vijaytelevision க்கு #VijayGoluContest- எனும் hashtag உடன் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்யும்படியும் போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .