Skip to main content

மணமேடையில் ஜல்லிக்கட்டு காளையுடன் போட்டோ-மணமகளின் ஆசையை நிறைவேற்றிய நண்பர்கள்!

Published on 23/08/2022 | Edited on 23/08/2022

 

Photo with the jallikattu bull on the wedding-friends who fulfilled the bride's wish!

 

‘அஞ்சாத சிங்கமாம் காளையை அடக்க வந்தால் பஞ்சாகப் பறந்துவிட வேண்டியதுதான். இப்படி ஒரு ஆபத்தை தேடிவரும் மாவீரன் யாராவது உண்டா?’ கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்பவர்கள், பழைய சினிமா பாடல் ஒன்றைப் பாடி  ‘கெத்து’ காட்டுவதுண்டு.

 

விருதுநகர் மாவட்டம் – வத்திராயிருப்பில் கனகலட்சுமி என்ற மணமகள், தனது திருமணத்தின்போது, ஜல்லிக்கட்டு காளையுடன் போட்டோ எடுத்து ‘கெத்து’ காட்டவேண்டும் என்று ஆசைப்பட்டார்.  அது நடந்திருக்கிறது.   விருதுநகர் மாவட்டம் – வத்திராயிருப்பு – அணைக்கரைபட்டியில் கனகலட்சுமிக்கும் அழகுமுனிக்கும் திருமணம் நடந்தது. மாடுபிடி வீரரான மணமகன் அழகுமுனிக்கு ஜல்லிக்கட்டு காளை என்றால் உயிர். வருங்கால கணவருக்கு எது பிடிக்கும் என்பதை அறிந்திருந்த கனகலட்சுமி, ‘ஏங்க.. நம்ம கல்யாணத்துல ஜல்லிக்கட்டு காளையை மேடையேற்றி நாமளும் சேர்ந்து நின்னு போட்டோ எடுக்கணுங்க..’ என்று தன்னுடைய ஆசையை அழகுமுனியிடம் வெளிப்படுத்தியிருக்கிறார். பிறகென்ன? அழகுமுனியின் நண்பர்கள் மணமகள் கனகலட்சுமியின் ஆசையைத் தெரிந்துகொண்டு, ஜல்லிக்கட்டுக் காளையை அலங்கரித்து மணமேடைக்கே அழைத்துவந்தனர். சந்தோஷத்தில் கனகலட்சுமி துள்ளிக்குதிக்காத குறைதான். மணமக்கள் இருவரும் ஆசை ஆசையாக ஜல்லிக்கட்டுக் காளையுடன் போட்டோ எடுத்துக்கொண்டனர்.  

 

நண்பனின் வாழ்க்கையில், அதுவும் திருமண நாளில் சந்தோஷம் பொங்கச் செய்த நண்பர்கள் பாராட்டுக்குரியவர்களே!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; மனைவியின் வினோத கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Disappointing results deny the wife's strange request on extramarital affair in UP

உத்தரப் பிரதேசம் மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த். கூலித்தொழிலாளியான ராம் கோவிந்தின் மனைவி கவிதா (34, பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமான 7 ஆண்டுகள் ஆன இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில், கவிதாவுக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம், கவிதாவின் கணவர் ராம் கோவிந்துக்கு தெரிய வந்துள்ளது. இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதில் மனமுடைந்த கவிதா, நேற்று முன் தினம் (03-04-24) தனது வீட்டு முன் உள்ள உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறியுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், கவிதாவை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். இதற்கு கவிதா மறுப்பு தெரிவித்து கம்பத்தில் ஏறியவாறு இருந்ததால், உடனடியாக இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறி அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். இதனை, அங்கிருந்த ஒருவர், தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதனையடுத்து, கீழே வந்த கவிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கவிதா தனது ஆண் நண்பரை தனது வீட்டில் தங்க வைக்க அனுமதிக்குமாறு தனது கணவரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வினோத கோரிக்கைக்கு ராம் கோவிந்த் மறுப்பு தெரிவித்து சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதன் காரணமாக அந்த பெண், டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரபல நடிகரை மணக்கும் அபர்ணா தாஸ்?

Published on 03/04/2024 | Edited on 05/04/2024
aparna das get to married deepak parambol

2019 ஆண்டு மலையாளத்தில் வெளியான மனோகரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் அபர்ணா தாஸ். கேரளாவை சேர்ந்த அவர் அடுத்த படமாகவே தமிழில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரீட்சயமாக உருமாறினார். பின்பு தமிழில் கவினுக்கு ஜோடியாக நடித்த டாடா படம் அடுத்தகட்டத்திற்கு அவரை அழைத்து சென்றது. மேலும், ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமான நடிகையாக மாற்றியது. 

இதனிடையே தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார். கடந்த ஆண்டு ஆதிகேஷவா படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். இப்படி மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்து வரும் அபர்ணா தாஸ் தற்போது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள நடிகர் தீபக் பறம்போலை நீண்ட நாள் காதலித்து வந்ததாகவும் ஏப்ரல் 24ஆம் தேதி அவரை திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணம் கேரளாவின் வடக்காஞ்சேரியில் நடக்கவுள்ளதாகவும் இது தொடர்பான பத்திரிக்கை ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

aparna das get to married deepak parambol

மலையாள படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த தீபக் பறம்போல், விஸ்வ விக்யாதரய பையன்மார் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து லவ் ஆக்‌ஷன் ட்ராமா, ஹெவன், கன்னூர் ஸ்குவாட் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் வெளியாகி மலையாளத் திரையுலகில் பெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஒருவராக நடித்திருந்தார். இருவரும் மனோகரம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இப்போது இருவருக்கும் திருமண நடக்கவுள்ளதாக சொல்லப்படும் தகவல் வைரலாக பேசப்படும் நிலையில், இருவர் தரப்பிலிருந்தும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் தீபக் பறம்போல் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் ஜோடியாக வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவிலும் ஏப்ரல் 24 என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.