ரெம்டெசிவிர் மருந்தை திருடி விற்றவர் கைது!  

Pharmacist  for stealing Remtacivir and selling it for Rs 36,000

தமிழகத்தில் இரண்டாம் அலைகரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் உறவினர்களை வெளியில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வர பரிந்துரைக்கின்றனர். ஒரு டோஸ் ரெம்டெசிவிர் 1,500 ரூபாய் என இருக்கும் நிலையில் கள்ளச் சந்தையில் அதன் விலை பல்லாயிரக்கணக்கில் கூடி உள்ளது. இதனால்ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

Pharmacist  for stealing Remtacivir and selling it for Rs 36,000

தேவையைச் சாதகமாக்கி ரெம்டெசிவிர் மருந்தைக் கள்ளச்சந்தையில் விற்கும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புரசைவாக்கத்தில் மெடிக்கலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தைதிருடி 36,000 ரூபாய்க்கு விற்ற மருந்தாளுனர்கைது செய்யப்பட்டுள்ளார். புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவமனையின்மருந்தக மேலாளர், ரெம்டெசிவிர் மருந்து இருப்பு குறித்து சரிபார்த்த பொழுது6 ரெம்டெசிவிர் மருந்துகள் காணாமல் போயிருந்தது. இதுதொடர்பாகஅங்குஇருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதே மருந்தகத்தில் கடந்த7 மாதமாக அங்கு மருந்தாளுனராகப் பணியாற்றிய ஜெயசூர்யா என்பவர்ரெம்டெசிவிர் மருந்தைதிருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இதுகுறித்த புகாரில் மருந்தாளுனர் ஜெயசூர்யா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் 6குப்பிரெம்டெசிவிர் மருந்தைஒருகுப்பி6 ஆயிரம் என்ற விலையில் மொத்தம் 36 ஆயிரத்திற்குதாம்பரத்தைச் சேர்ந்த ஸ்டாலின் தாமஸ் என்பவருக்கு விற்றது தெரியவந்தது. சென்னையில் மட்டும் இதுவரை 15 பேர் இதுபோல் ரெம்டெசிவிர் மருந்தைக் கள்ளச்சந்தையில் விற்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai corona virus Medical Remdesivir
இதையும் படியுங்கள்
Subscribe